Wednesday, 31 December 2025

வலிமார்களின் கூற்றில் நாயகத் தோழர் ஸெய்யிதினா முஆவியா ‎رضي الله عنه ‏‏


இறைநேசர்கள்  (ரஹ்மஹுமுல்லாஹ்) நாயகத் தோழர்கள் சஹாபா (ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) குறித்து என்ன கூறுகின்றனர் ? 

தற்காலத்தில் நாயகத் தோழர்களான சஹாபாக்களை இழிவுபடுத்துபவர்கள் இணையவெளியில் தங்களை அஹ்லேஸுன்னத் வல் ஜமாத்தினர் என்று கூறிக்கொண்டும் ஏதேனும் சூஃபி தரீக்காவைப் பின்பற்றுபவர்கள் ( ஷாதுலியா மதுரை,காதிரியா ஐதுரூசியா ஏர்வாடி,காதிரி ,ஜிஷ்தி )  என்றும் தங்களை அழைப்பது போல் தோன்றுகிறது. 

இந்தக் கட்டுரையில், நான்கு முக்கிய சில்சிலாக்களைச் சேர்ந்த பெரும் வலிமார்களின் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம், சஹாபாக்களை இழிவுபடுத்துவது இறைநேசர்களின்  வழிமுறை அல்ல என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் உண்மையான வலிமார்களை பின்பற்றுபவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்கிறோம்.

சஹாபாக்கள் رضي الله عنهم أجمعين குறித்து பெரும்பான்மையான வலிமார்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.

(1) ஆலே ரஸுல் ,அவ்லாதே அலீ தாதா கஞ்ச் பக்ஷ் ஸெய்யத்  அலீ ஹுஜ்வீரி (رَحِمَهُ ٱللَّٰهُ),பாகிஸ்தான்

«جميع صحابه رضی الله عنهم عادل‌اند و اختلاف ايشان بر طريق اجتهاد بود، و طعن در هيچ يك روا نيست.»

நூல் 📕 கஷ்ஃப் அல்-மஹ்ஜூப், பாப் அஸ்-ஸஹாபா

 
“அனைத்து சஹாபாக்களும் – அல்லாஹ் அவர்களுடன் திருப்தியடையட்டும் – நீதிமான்களாகவும் நேர்மையானவர்களாகவும் உள்ளனர். அவர்களிடையே ஏற்பட்ட வேறுபாடுகள் இஜ்திஹாத் (சுயமாய்ச்சி முயற்சி) அடிப்படையில் ஏற்பட்டவையாகும். அவர்களில் எவரையும் விமர்சிப்பது அனுமதிக்கப்பட்டதல்ல.”

தாதா கஞ்ச் பக்ஷ்  رَحِمَهُ ٱللَّٰهُ  சஹாபாக்களின் சச்சரவுகளை ஏன் விவாதிக்கக் கூடாது என்பது குறித்து மேலும் விவரிக்கின்றார்கள்,

«آنچه ميان صحابه واقع شد سرّی بود از اسرار الهی، و زبان در آن گشودن علامت حرمان است.»

நூல் 📕 கஷ்ஃப் அல்-மஹ்ஜூப்

“சஹாபாக்களிடையே நிகழ்ந்தவை அல்லாஹ்வின் ரகசியங்களில் ஒன்றாகும்; அதைப் பற்றி நாவைத் திறப்பது (விவாதிப்பது) பாக்கியக்குறைவின் அடையாளமாகும்.”

(2) ஆலே  நபி ,அவ்லாதே அலீ ஸுல்தானுல் ஹிந்த் க்வாஜா கரீபுந் நவாஸ்  ஸெய்யது முஈனுத்தீன் சிஷ்தீ رَحِمَهُ ٱللَّٰهُ 

«طريق اهل سنّت آن است كه دل از كينهٔ هيچ صحابی پاك دارند.»

ஆரம்பகால சிஷ்தீ தொகுப்புகளில் (சீரத்துல் அவ்லியா) குறிப்பிடப்பட்டுள்ளது

**தமிழ் மொழிபெயர்ப்பு**  
“அஹ்லுஸ் ஸுன்னாவின் பாதை என்பது, எந்த சஹாபியிடமும் உள்ளத்தில் வெறுப்பு இல்லாமல் இருப்பதாகும்.”

(3) மஹ்பூபே இலாஹி ஷெய்கு  நிழாமுத்தீன் அவ்லியா ஜிஷ்தி رَحِمَهُ ٱللَّٰهُ

நூல் 📕 ஃபவாயிதுல் ஃபுவாத்

«هر كه در صحابه زبان دراز كند، از راه عشق محروم ماند.»

**தமிழ் மொழிபெயர்ப்பு**  
“யார் சஹாபாக்களுக்கு எதிராக நாவை நீட்டுகிறாரோ (அவர்களை இழிவுபடுத்துகிறாரோ), அவர் தெய்வீக அன்பின் பாதையிலிருந்து விலக்கப்பட்டவராவார்.”

(4) இமாம் ரப்பானீ ஷெய்கு அஹ்மத் சிர்ஹிந்தீ நக்‌ஷபந்தி பாரூக்கி رَحِمَهُ ٱللَّٰهُ 

ஆதார நூல் 📕 மக்தூபாத், தொகுதி 1, கடிதம் 251

«حق با حضرت علی رضی‌الله عنه بود، اما حضرت معاویه رضی‌الله عنه نیز مجتهد بود و مأجور است، و زبان دراز کردن بر او گمراهی است.»

**தமிழ் மொழிபெயர்ப்பு**  
“உண்மை ஹழ்ரத் அலீ رضي الله عنه உடனே இருந்தது, ஆனால் ஹழ்ரத் முஆவியா رضي الله عنه கூட முஜ்தஹிதாகவும் (சுயமான ஆய்வு செய்பவர்) இருந்தார்; அவருக்கு நற்கூலி உண்டு. அவருக்கு எதிராக நாவை நீட்டுவது வழிகேட்டாகும்.”

(5) வலிகள் கோமான் ஸுல்தானுல் அவ்லியா கவ்துல் அஃலம் முஹையத்தீன்  அப்துல் காதிர் ஜீலானீ  قدس الله سره العزيز **

ஆதார நூல் 📕 அல்-குன்யா லித்-தாலிபீ தரீக் அல்-ஹக்

«ويجب الكفّ عمّا شجر بين الصحابة، والترضي عنهم أجمعين، ومنهم معاوية رضي الله عنه، فإنهم مجتهدون.»

**தமிழ் மொழிபெயர்ப்பு**  
“சஹாபாக்களிடையே நிகழ்ந்தவற்றைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்ப்பது கடமையாகும். அவர்கள் அனைவரையும் – முஆவியா رضي الله عنه உட்பட – திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் முஜ்தஹிதுகளாவர்.”

(6) ஷெய்குல் இஸ்லாம் ஷிஹாபுத்தீன் உமர் சுஹ்ரவர்தீ قدس الله سره العزيز

ஆதார நூல் 📕 அவாரிஃப் அல்-மஆரிஃப்

«الصحابة كلهم عدول، وما وقع بينهم كان عن اجتهاد، والطعن في واحدٍ منهم خروج عن طريق القوم.»

**தமிழ் மொழிபெயர்ப்பு**  
“அனைத்து சஹாபாக்களும் நீதிமான்களாவர். அவர்களிடையே நிகழ்ந்தவை இஜ்திஹாத் மூலமாகவே நிகழ்ந்தன. அவர்களில் ஒருவரைத் தாக்குவது (இழிவுபடுத்துவது) கௌம் (தஸவ்வுஃப் மக்களின்) பாதையிலிருந்து வெளியேறுவதாகும்.”

**சஹாபா வெறுப்பாளர்களுக்கு ( குறிப்பாக நாயகத் தோழர் முஆவியா رضي الله عنه அவர்களை நிந்தனை செய்வோருக்கு )  **:  

நீங்கள் பின்பற்றுவதாகக் கூறும் பெருங்கொண்ட இறைநேசச் செல்வர்களின் நூல்களைப் படிக்காமலேயே, அவர்களின் ஆசான்களான சஹாபாக்களுக்கு எதிராக வாயைத் திறந்தது ஏமாற்றம் அளிக்கின்றது, வருத்தமளிக்கிறது. 

அவர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அருள்பெற்ற தூதர் ﷺ அவர்களின் சஹாபாக்களிடம் மிக உயர்ந்த அதபை (மரியாதையை) காட்டினார்கள்; அவர்களைத் தங்கள் ஆசான்களாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு துரதிர்ஷ்டசாலிகள்! அவ்லியா, உலமா மற்றும் முஹத்திஸீன்களின் அறிவுரையை மீறி நடப்பவர்களாக இருக்கின்றீர்கள்.

நீங்கள் இன்னும் மூச்சு விடும் வரை பாவமன்னிப்புக் கோருங்கள் (தவ்பா செய்யுங்கள்). ஏனெனில், அல்லாஹ்வின் அருள்பெற்ற தூதர் ﷺ அவர்களின் சஹாபாக்களை இழிவுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

அல்லாஹ் எங்களைக் காப்பாற்றுவானாக! அவனது அருள்பெற்ற தூதர் ﷺ, அவர்களின் சஹாபாக்கள், அவர்களின் குடும்பத்தினர், அனைத்து அவ்லியா உல்லாஹ் மற்றும் உலமா-ஏ-ஹக் ஆகியோர் மீது நிலையான அன்பை எங்கள் இதயங்களில் ஏற்படுத்துவானாக! எங்கள் சந்ததியினர் இவர்களில் எவரையும் இழிவுபடுத்துபவர்களாக ஆகாமல் இருக்கட்டும்.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم

Sunday, 28 December 2025

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களது சமர்

🌹 பூமான் நபி  ﷺ அவர்களது சமர் 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள்,

இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , 

அண்ணல் நபி  ﷺ அவர்களது அருந்தவ தோழர்களான ஸஹாபா பெருமக்களது இக்திலாப் - முரண்பாடுகள் குறித்து விவாதம் செய்யாதீர்கள்,ஏனெனில் நாளை கியாமத் நாளில் உங்களது மத்தே முகப்பில் -  எதிர் சமர் புரிபவர்கள்  அண்ணல் நபி  ﷺ அவர்கள் ஆவார்கள் .

ஆதார நூல் 📕 சவ்ன் அல் மன்திக் வ கலாம் அன் பன்ன அல் மன்திக் வ கலாம் ,பாகம் 1 பக்கம் 60 


Tuesday, 23 December 2025

ஹதீஸ்களை கற்பதில் கவனம்

🌹  ஹதீஸ்களை கற்பதில் கவனம் 🌹

இமாம் ஹாபிழ் கதீப் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 463) அவர்கள் முழு ஸனதுடன் அறிவிக்கின்றார்கள்  ,

أخبرنا علي بن محمد بن عبدالله المعدل أنا محمد بن عمر الرزاز أنا محمد بن عبد الملك الدقيقي قال ثنا محمد بن إسماعيل السكري الكوفي قال ثنا حماد بن زيد قال دخلنا

على أنس بن سيرين في مرضه فقال : اتقوا الله يا معشر الشباب وانظروا عمن تأخذون هذه الأحاديث فإنها من دينكم .

ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் ஸிரீன் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " ஓ இளைஞர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ; இன்னும் நீங்கள்
யாரிடம் இருந்து ஹதீஸ்களை கற்றுக் கொள்கின்றீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள் ,ஏனெனில் இது உங்கள் மார்க்கம் "

ஆதார நூல் 📕 கிஃபாயா பீ இல்ம் அல் ரிவாயா ,பக்கம் 113



Wednesday, 26 November 2025

முஹத்திஸீன்களது வஸீலா

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رَحِمَهُ ٱللَّٰهُ  மற்றும் இமாம் தஹபீ رَحِمَهُ ٱللَّٰهُ   ஆகிய இரு மகத்தான முஹத்திஸ்களும், ஹதீஸின் உஸூல்கள் மற்றும் அஸ்மாஉர்ரிஜால் அறிவின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி கோருவது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது பற்றி விளக்கிய அகீதா (நம்பிக்கை) பின்வருமாறு:

ஹஜ்ரத் அபூ அலீ நைஷாபூரீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு: 349 ஹிஜ்ரீ) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் மிகவும் கடுமையான கஷ்டத்திலும் துன்பத்திலும் இருந்தேன். அப்போது எனக்கு கனவில் அண்ணல் நபி ரசூலுல்லாஹ்  ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது ஏந்தல் நபி  ﷺ  அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

‘யஹ்யா பின் யஹ்யா அவர்களின் கப்றிடம் செல், அங்கு நீ இஸ்திஃபாரும் (பாவமன்னிப்புக் கோருதலும்) செய், அவரை வஸீலாவாக வைத்து உதவி கோரு; அப்போது உன் கஷ்டம் நீங்கிவிடும்.’

நானும் அவ்வாறே செய்தேன்; மறுநாளே என் துன்பம் நீங்கிவிட்டது.”

( இமாம் யஹ்யா பின் யஹ்யா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் மறைவு : 226 ஹிஜ்ரீ)

ஆதார  நூல் 📕தஹ்தீபுத் தஹ்தீப், தொகுதி 4, பக்கம் 398

இப்போது எந்த வஹ்ஹாபியோ, தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரோ அல்லது அஹ்லே ஹதீஸ் உடையவராவது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரை கப்ரு வணக்கம் செய்பவர்கள்,ஷிர்க் செய்பவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்று  ஃபத்வா கொடுக்கத் துணிவாரா?


Friday, 21 November 2025

பூமான்   ‎நபி ‎அவர்களை ‎நிந்தனை ‎செய்ததற்கான ‎தீர்ப்பு



  இஸ்லாமிய கிலாபத்தில் பூமான் நபி  ﷺ அவர்களை நிந்தனை செய்ததற்கான மார்க்கத் தீர்ப்பு : 

பிரசித்திபெற்ற முஃபஸ்ஸிர் ஹழ்ரத் ஷெய்கு இஸ்மாயில் ஹக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், சூரா அபஸா-வின் முதல் ஆயத்தின் தஃப்ஸீரில் எழுதுகிறார்கள்:

பாரூக்குல் அஃலம் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களின் கிலாஃபத்தில் , ஒரு முனாஃபிக் மஸ்ஜித் இமாம் ஒரு பழக்கம் வைத்திருந்தான். அவன் பெரும்பாலும் ஃபஜ்ர் தொழுகையில் சூரா அபஸா (சூரத் அபஸா வ தவல்லா) ஓதுவான்.

 இதன் மூலம் அவன் உள்ளத்தில் இப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்வான்: “இந்த சூரா அல்லாஹ் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கண்டிப்புச் செய்த சூராவாகும்” (மஆஸல்லாஹ்).

இந்த விஷயம் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு தெரிய வந்தபோது – முனாஃபிக்குகளில் ஒருவன் தன் சமூகத்திற்கு இமாமத்து செய்து, ஜமாஅத்துடன் தொழுகையில் எப்போதும் சூரா அபஸா ஓதி வருகிறான் என்று – உடனே அவனை அழைத்து வரச் செய்தார்கள். 

மேலும் எந்த விசாரணையும் செய்யாமல், அந்த அல்லாஹ்வின் ஹபீபை அன்றாடம் நிந்தனை செய்வதை தமது கடமையாகவே வைத்திருந்த இமாமின் கழுத்தை துண்டித்தார்கள்.

**குறிப்பு :**  
வெளிப்பார்வைக்கு அவன் குர்ஆனைத்தான் ஓதினான். ஆனால் ஆயத்தின் தவறான அர்த்தத்தை எடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தை தாழ்த்தும் நோக்கத்துடன் செய்தான். அதனால் அவனுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. அவனுடைய குர்ஆன் ஓதுதலும், மஸ்ஜித் இமாமாக இருந்ததும் எதுவும் உதவவில்லை. ஏனெனில் அவன் ஈருலகின் இரட்சர் அண்ணல் நபி   ﷺ அவர்களை அவமரியாதை செய்தவன் ஆவான்.

ஆதார நூல் 
தஃப்ஸீர் ரூஹுல் பயான்  
பாகம் 10, பக்கம் 336

Monday, 10 November 2025

நபிமார்களைக் கொண்டு வஸீலா

🌹நபிமார்களைக்  கொண்டு வஸீலா 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத ஸெய்யிதினா அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , 

" அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் இப்னு ஹிஷாம் رضی الله عنها அவர்கள் மவ்த்தான பொழுது அங்கு வந்த கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்  அன்னாரின் தலைமாட்டில் அமர்ந்து,

' என்னுடைய தாயார் அவர்களே !  அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக. என்னுடைய தாயாருக்குப் பின் எனக்கு தாயாக இருந்தீர்கள்.தாங்கள் பசித்திருந்து எனக்கு வயிறார உணவளித்தீர்கள்.தங்களுக்கு ஆடை இல்லாத பொழுது எனக்கு ஆடை அணிவித்தீர்கள்.

நல்ல உணவை தங்களுக்கு தடுத்து எனக்கு ஊட்டினீர்கள்.இவற்றால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் ,மறுமை வெற்றியையும் நாடினீர்கள்." என்றுரைத்தார்கள்.

பின்னர் ஜனாஸாவை குளிப்பாட்டவும்,மூன்று முறை தண்ணீர் ஊற்றவும் பணித்தார்கள்.கற்பூரம் கலந்த நீரால் குளிப்பாட்டும் நேரமான பொழுது தமது திருக்கரங்களால் அவர்கள் மீது ஊற்றினார்கள்.பின்னர் தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றிக் கொடுத்து அணிவிக்கச் செய்தார்கள்.அதன்மீது கஃபன் ஆடை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்கள் ஸஹாபா பெருமக்களான ஹழ்ரத் உஸாமா இப்னு ஜைத்,ஹழ்ரத் அபூஅய்யூப் அன்சாரி ,பாரூக்குல் அஃலம் ஹழ்ரத்  உமர் கத்தாப் மற்றும் ஓர் கருப்பு அடிமைச் சேவகர் ஆகியோரை அழைத்து கப்ரை தொண்டச் சொன்னார்கள்.

அவர்கள் கப்ர் தோண்டினர்.பின்னர் கப்ரின் அடிப்பகுதியானதும் பெருமானார்  ﷺ அவர்கள் கப்ரின் உள்ளே இறங்கி,ஒருக்களித்து சாய்ந்து படுத்துக் கொண்டு , ' அல்லாஹ் உயிர் கொடுப்பவனும்,மரணிக்கச் செய்பவனும் ஆவான்.அவன் நித்திய ஜீவனும்,மரணமற்றவனுமாவான்.

யா அல்லாஹ் ! உன்னுடைய நபிமார்களுடையவும்,எனக்கு முன்னால் வந்த நபிமார்களுடையவும் பொருட்டால் என்னுடைய தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களுக்கு நீ பிழை பொறுத்தருள்வாயாக ! 

அவர்களுக்கு ( கப்ரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல) ஆதாரத்தை மொழியச் செய்வாயாக ! அவர்கள் புகுமிடத்தை நீ விசாலப்படுத்துவாயாக ! நிச்சயமாக கருணையாளர்களில் நீயே கருணையாளன் " ( என்று துஆ செய்து விட்டு ) நான்கு முறை தக்பீர் சொல்லி தொழ வைத்தார்கள்.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்களும்,ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه அவர்களும் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் رضي الله عنه அவர்களும் சேர்ந்து கப்ருக்கள் ஜனாசாவை வைத்தனர்.

ஆதார நூல் 📕 இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஃஜமுல் கபீர் ,ஹதீஸ் எண் 871,முஃஜமுல் அவ்ஸத் ,ஹதீஸ் எண் 189

Saturday, 8 November 2025

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களது கன்னிப் பேச்சு

🌹 பூமான் நபி  ﷺ அவர்களது கன்னிப் பேச்சு 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஃபத்ஹுல் பாரீ ஷர்ஹு ஸஹீஹில் புகாரியிலும், இமாம் அல்வாஃகிதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது ஸீராவிலும் குறிப்பிடுகிறார்கள்:

“அல்லாஹ்வின் நபி ﷺ பிறந்த உடனேயே தொட்டிலில் பேசினார்கள்.”

இமாம் இப்னு ஸபா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் தமது கஸாயிஸில் குறிப்பிடுகிறார்கள்:

“கண்மணி நாயகம் ﷺ அவர்களின்  தொட்டில் மலக்குகளின் அசைவோடு அசைந்து கொண்டிருக்கும்.”

அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ   அவர்கள் பால் கழித்தவுடன் முதல் முறையாக உச்சரித்த திக்ர் ! 

இமாம் பைஹஃகீ رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாயகத் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் رضي الله عنه வழியாக அறிவிக்கிறார்கள்:

அன்னை ஸய்யிதா ஹலீமா رضی الله عنها அவர்கள் கூறினார்கள்:

 “நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு முதல் முறையாக பால் கழித்த போது, அவர்கள் பேச ஆரம்பித்து இவ்வாறு கூறினார்கள்:

 **‘அல்லாஹு அக்பர் கபீரா’**  
(அல்லாஹ் மிகப் பெரியவன், மகத்தான பெரியவன்)  
**‘வல்ஹம்து லில்லாஹி கஸீரா’**  
(அல்லாஹ்வுக்கே மிகுதியான புகழ் அனைத்தும்)  
 **‘வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா’**  
 (காலையிலும் மாலையிலும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்).

இந்த வார்த்தைகளால் அவர்கள் பேசினார்கள். அவர்கள் வளர்ந்து கொண்டே வந்த போது, வெளியே சென்று குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பார்கள், ஆனால் அவர்களை விட்டு விலகியே இருப்பார்கள்.”

[ஆதார நூல் 📕 இமாம் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ,  அல்-மவாஹிபுல் லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 81]

Thursday, 30 October 2025

அக்கிரக்காரனும்,அவனது உதவியாளர்களும்

📝அக்கிரமக்காரனும் ,அவனது உதவியாளர்களும் 

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களது மாணவர் ஹழ்ரத்  அபூ பக்ர் அல்-மரூதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்:

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் رضي الله عنه  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைக்காவலர் வந்து அவரிடம் :  
“ஓ அபூ அப்துல்லாஹ், அக்கிரமக்காரர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் பற்றிய ஹதீஸ் உண்மையா?” என்று வினவினார்.

இமாம் அவர்கள்  கூறினார்கள்:  
“ஆம். அது உண்மை தான்”

சிறைக்காவலர் கூறினார்:  
“நான் அக்கிரமக்காரர்களின் உதவியாளர்களில் ஒருவனா?”

இமாம் அஹ்மத் கூறினார்கள் :  
“அக்கிரமக்காரர்களின் உதவியாளர்கள் என்போர் உனக்காக முடி வெட்டுபவர்கள், உடைகளைத் துவைப்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், உன்னிடமிருந்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆவர், நீயோ அக்கிரமக்காரர்களில் ஒருவனே.”

[ஆதார நூல் 📕 மனாகிப் அபீ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹம்பல் - பக்கம் 431 ]

Tuesday, 28 October 2025

முஸாபிர்களின் அமல்



“அஃயூனூனி யா இபாதல்லாஹ்” இந்த ஹதீஸ் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் இது அனுபவத்தில் பரீட்சிக்கப்பட்ட அமலாகும்.

இமாம் முல்லா அலீ காரீ رَحِمَهُ ٱللَّٰهُ (வஃபாத் 1014 ஹி.) எழுதுகிறார்கள்:

" அல்-ஹிஸ்னுல் ஹஸீனில் நூலில் இமாம் முஹத்தித் அல் ஜசரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : “ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் கூறட்டும்: “அஃயூனூனி யா இபாதல்லாஹ்” (அல்லாஹ்வின் அடியார்களே, உதவி செய்யுங்கள்) (3 முறை). 

இதை இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் , நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உத்பா பின் ஃகஸ்வான் رضي الله عنه  அவர்களிடமிருந்து ரிவாயத் செய்துள்ளார்கள். 

சில  உலமாக்கள் கூறினார்கள்: “இந்த ஹதீஸ் ஹஸன் ஆகும் மற்றும் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் மஷாயிக்களிடமிருந்தும் ரிவாயத் உள்ளது இது அனுபவம் வாய்ந்த அமல் ஆகும், இது மகிழ்ச்சியுடன் செய்யப்படுகிறது.

(ஆதார நூல் 📕 மிர்காத் அல்-மஃபாதீஹ்: ஷர்ஹ் மிஷ்காத் அல்-மஸாபீஹ்” பக்கம் 295)

Saturday, 25 October 2025

பெருமானாரின் முஃஜிஸாத்


இமாம் இஸ்பஹானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்:

"யாராகிலும்  : 'ஹஸ்ரத்  ஸெய்யிதினா ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் அனுமதியுடன் மரித்தவர்களை உயிர்ப்பித்தார்கள்,' என்று கூறினால் 

அதற்கு நாம் கூறுவோம்: இதைவிட மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் தஆலா நமது நபி கரீம் முஹம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தரஜாவை உயர்த்தினான். அண்ணல் நபி  ﷺ அவர்களுக்கு  ஒரு தெளிவான அடையாளத்தை வழங்கினான், இதைப் பலரும் கண்டனர். 

நாயகத் தோழர் ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இறந்துபோன ஆட்டை உயிர்ப்பித்து வைத்தான். மேலும், ஒரு அன்ஸாரி பெண்ணின் மகனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அல்லாஹ் தஆலா உயிர்ப்பித்தான். இவை இரண்டுமே மிகவும் ஆச்சரியமான அற்புதங்களாகும், இவை நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபித்துவத்தின் மற்றும் உண்மையின் அடையாளங்களாகும்."

📔(நூல்: தலாயிலுந்நுபுவ்வா, பக்கம் 616)

Wednesday, 22 October 2025

ஈஸால் ஸவாப்

  🌹ஈஸால் ஸவாப் 🌹

இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , " நீங்கள் கப்ரஸ்தானில் நுழைந்தால், பாத்திஹா ஸுரா,மூன்று குல் ஆகியவற்றை ஓதி அதன் வெகுமதியை மண்ணறையில் அடங்கியுள்ளவர்களுக்கு  சமர்பிக்கவும்.அது அவர்களை சென்றடையும் "

📕 தபகாத்துல் ஹனாபிலா,காழீ அபூ யஃலா رَحِمَهُ ٱللَّٰهُ 



Tuesday, 7 October 2025

வலிமார்களிடம் வஸீலா

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா ,குத்புல் இர்ஷாத் இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்களது மகனார்  13ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹாதித் தெஹல்வி رضي الله عنه நவீன வழிகெட்ட கொள்கைவாதிகளுக்கு மறுப்புரையாக தமது தப்ஸீரில் பின்வருமாறு  எழுதுகின்றார்கள்

கேள்வி : 

அவ்லியாக்களின்  கப்ர் (மஸார்) அருகே உதவி கேட்க ஏன் செல்கிறார்கள், அவர்கள் தான்  இறந்துவிட்டார்களே?

 பதில்:

ஜிஸ்முக்கும் (உடலுக்கும்) ரூஹுக்கும் (ஆன்மாவுக்கும்) தொடர்பு உள்ளது. 
அவ்லியாக்களை  அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியின்றி சுயமான தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாக நம்புவது ஷிர்க் ஆகும்.
அதாவது, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரின்  மஸார்களுக்கு செல்வது இத்தகைய கொள்கைகளில்  விடுபட்டது.

Sunday, 5 October 2025

வரலாற்றின் வெளிச்சத்தில் மீலாதுந்நபி

தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்,ஊடைவியளாலர்,இலங்கை வானோலி 

வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புனித  மக்கா மற்றும் மதீனாவில் நடைபெற்ற  மீலாத்துந் நபிதின கொண்டாட்டங்கள் : 

1. அல்லாமா முல்லா அலி காரீ( இறப்பு : கி.பி. 1605) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தின் போது மதீனா மக்களின் வழக்கத்தை இவ்வாறு கூறுகின்றார்கள் ,

" மதீனாவாசிகள் (அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிவானாக) அத்தினத்தில் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் உற்சாகத்துடனும் நேர்மையான முறையிலும் கலந்துகொள்கின்றனர். "

[ 📕 நூல் : மவ்ரித் அர்-ராவி பி மவ்லித் அந் நபவி, பக்கம் 29] 

2. இப்னு அல்-ஜவ்ஸி (இறப்பு : கி.பி.1256) பின்வருமாறு கூறுகின்றார்கள் ,

" மக்கா முகர்ரமா மற்றும் மதீனா முனவ்வரா, எகிப்து, யெமன், சிரியா மேலும் அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.ரபிய்யுல் அவ்வல் பிறை தென்பட்டதும் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். அவர்கள் குளித்து தம்மிடமுள்ள சிறந்த உடைகளை அணிந்து, நறுமணங்களை பூசிக்கொள்கின்றனர். அத்தினத்தில் ஏழைகளுக்கு மிக சந்தோஷத்துடன் உதவி செய்கின்றனர், மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லித்களை ( புகழ்மாலைகளை) கேட்பதில் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதன் மூலம் வருடம் முழுவதும் நலவுகள் நடக்கின்றது எனவும்,பாதுகாப்பும் கிடைக்கின்றது எனவும்,பிள்ளைகள் மற்றும் செல்வம் அதிகரிக்கின்றது எனவும், நகரங்களில் மற்றும் வீடுகளில் சமாதானம் நிலவுகின்றது எனவும் அவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. "

[ நூல்கள் : 
* அல்-மீலாத்துன் நபவி, பக்கம் 58
* தப்ஸீர் ரூஹுல் பயான் - அல்லாமா இஸ்மாயில் ஹக்கி  பாகம் 9: பக்கம் 56
* அத்- துர்ரல் முனஸ்ஸம், பக்கம் 100,101]

3.இமாம் யூசுப் பின் இஸ்மாயில் அந்-நப்ஹானி قدس الله سره العزيز (1849-1932) கூறுகின்றார்கள்.

" மக்காவாசிகள் ஒவ்வொரு வருடமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தன்று பெரும் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்"

📕 [ நூல்  : ஜவாஹிர் அல்-பிஹார், பக்கம் 122 ] 

4.இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز  (கி.பி. 1703-1762) கூறுகின்றார்கள்,

" ஒவ்வொரு வருடமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் மக்காவாசிகளால் கொண்டாடப்பட்டதுடன், அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். "

📕 [ நூல்  : புயூத் அல்-ஹரமைன் ] 

5.மக்கா முக்கர்ரமாவின் அல்-கிப்லா பத்திரிகையில் வெளியாகிய செய்தி இதனை சான்று பகிர்கின்றது.

" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டங்களை புனித மக்கா நகரில் அவதானிக்கலாம். மக்காவாசிகள் இத்தினத்தை யவ்ம் அல்-ஈத் மவ்லித் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என அழைக்கின்றனர். இத்தினத்தில் மக்கள் சுவையான உணவுகளை தயாரிக்கின்றனர். மேலும், மக்காவின் ஆளுநரும் மற்றும் ஹிஜாஸின் இராணுவத் தளபதி உட்பட அவர்களது படையினர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கு, கஸீதாக்களை பாடியவர்களாக அணிவகுத்து செல்கின்றனர். புனித ஹரம் அல்-மக்கிக்கும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்திற்கும் இடையில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், அப்பாதையில் இருக்கும் கடைகளும், வீடுகளும் சோடிக்கப்பட்டிருக்கும்.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில்,முழுநாளும் மக்கள் கஸீதாக்களை ( புகழ்மாலைகளை) பாடிக் கொண்டிருப்பர். ரபீய்யுல் அவ்வல் பிறை 11இல் இஷாவிற்கு பின்னர் மவ்லித் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் "

நூற்கள் : 
* அல்-கிப்லா பத்திரிகை - மக்கா முகர்ரமா
* தரீக்கத் சஞ்சிகை - லாகூர், ஜனவரி 1917, பக்கம் 2-3

6. ஹிஜ்ரி 7ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்களான செய்க் அபூ அல்-அப்பாஸ் மற்றும் அவரது மகன் அபூ அல்-காஸிம் கூறுகின்றார்கள்,

" பக்தியுள்ள யாத்திரீகர்கள் மற்றும் நாடுகாண் பயணிகள் சாட்சியமளித்துள்ளார்கள். அதாவது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தன்று மக்காவில் கொடுக்கல், வாங்கல், வியாபாரங்கள் கூட நடைபெற மாட்டாது. மக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதில் வேலையாக இருப்பார்கள்,  அங்கு சன நெருக்கமாக இருக்கும். மேலும் அந்நாளில் புனித கஃபதுல்லாஹ்வை தரிசிப்பதற்காக திறக்கப்பட்டு இருக்கும்."

நூல் : கித்தாப் அல்-துர் அல்-முனஸ்ஸம்

7. ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியரும், நாடுகாண் பயணியுமான இப்னு பத்துதா, அவரது புத்தாகமான "ரிஹ்லாவில்"  இவ்வாறு கூறுகின்றார்.

" ஒவ்வொரு ஜூம்ஆ தொழுகையின் பின்பும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தன்றும்  பனூ ஷைபா கோத்திரத்தின் தலைவரால் புனித கஃபாஹ் திறக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில், மக்கா முகர்ரமாவின் ஷாபி மத்ஹப்பின் தலமை நீதிபதி நஜ்ஜுமுத்தீன் இப்ன் அல்-இமாம் முஹியித்தீன் அல்-தபரி அவர்களால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாருக்கும், மக்காவாசிகளுக்கும் உணவு பரிமாறப்படுகின்றது. "

8.வரலாற்று ஆசிரியர் ஷெய்கு இப்ன் ஸாஹிரா அல்-ஹனபி அவரது 'ஜாமி அல்-லத்தீப் பி பாதில் மக்கதா வ-அகிலா'(பக்கம்-326) என்ற புத்தகத்திலும், இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி அவரது 'கிதாப் அல்-மவ்லித் அல்-ஷரீப் அல்- முஅஸ்ஸம்' என்ற புத்தகத்திலும், வரலாற்று ஆசிரியர் செய்க் அல்-நஹ்வலி அவரது 'அல்ஈலம் பிஆலம் பைத் அல்லாஹ் அல்-ஹரம்' (பக்கம்-205) என்ற புத்தகத்திலும் பின்வருமாறு கூறுகின்றனர்.

" ஒவ்வவொரு வருடமும் ரபீய்யுல் அவ்வல் பிறை 12இல், மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர், மக்கா முக்கர்ரமாவின் நான்கு காதிகளும் (நான்கு மத்ஹபை பிரிநிதித்துவம் செய்யும் நான்கு காதிகள்) மற்றும் மக்கா முக்கராவின் நீதிபதிகள், முக்கியஸ்தர்கள்,செய்குமார்கள், ஸாவியா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அறிஞர்கள் அடங்கிய பெரிய குழுவினர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் இருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரசிப்பதற்காக திக்ர் மற்றும் தஹ்லில் மொழிந்தவர்களாக செல்கின்றனர்.அவர்கள் செல்லும் பாதை விளக்குகளாலும், மெழுகுவர்த்திகளாலும் ஒளியூட்டப்பட்டிருக்கும். அங்குள்ள மக்கள் விசேட உடைகளை அணிந்தவர்களாக பாதை வழியே இருப்பார்கள். அவர்கள் தமது பிள்ளைகளையும் கூட்டிவருவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ளே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின உரை இடம்பெறும். அதன் பின்னர், உஸ்மானிய சுல்தான்,மக்கா முகர்ராமாவின் அமீர் ஆகியோருக்கு துஆ செய்யப்படும். அதனை ஷாபி மத்ஹபின் காதி நிறைவேற்றுவார். இஷாத் தொழுகைக்கு சற்று முன்னர் அவர்கள் அனைவரும் புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்கு திரும்புவர்.அங்கு மக்காமு இப்ராஹீம் அலைஹிஸ்லாம் அருகில் வரிசையாக உட்காருவர். "

பிற்குறிப்பு :
புனித மக்காவின் ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி தின நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 1924 ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிரித்தானியாவின் உதவியுடன் ஹிஜாஸ் பிரதேசம் ஒன்றிணைக்கப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. 1925ஆம் ஆண்டு ஜன்னத்துல் பக்கி உட்பட பல இடங்களில் இஸ்லாமிய வரலாற்று சின்னங்கள் உடைக்கப்பட்டன. மேலும், புனித ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி  தின நிகழ்வுகள் முற்றாக நிறுத்தப்பட்டன.

படம்-1 : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த வீடு (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

படம்- 2 : புனித மக்கா ஹரம் ஷரீபில் நடைபெறும் மீலாத்துன் நபி தின கொண்டாட்டம் - அரிய புகைப்படம் (கி.பி. 1900இன் ஆரம்பப் பகுதி)




Monday, 29 September 2025

தப்தீழி


தஃப்திழிகள் 

இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி அஹ்மத் சிர்ஹிந்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகிறார்கள் :

“ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அலி رضي الله عنه  அவர்கள்,  ஸித்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா  அபூபக்கர்  சித்தீக் رضي الله عنه  அவர்களை விட அந்தஸ்த்தில்  உயர்ந்தவர் என்று கூறுபவர் அஹ்லுஸ்-சுன்னத் வல் ஜமாத்தில் இருந்து  வெளியேற்றப்படுவார்.

பின்னர், தன்னை உயர்ந்தவராகக் கருதுபவனின் நிலை என்னவாக இருக்கும்? மேலும், இந்தக் குழுவில் (அதாவது சூஃபியாக்களில்) ஒரு ஸாலிக்  தன்னை ஒரு தாழ்ந்த நாயை விட உயர்ந்தவராகக் கருதினால், அவர் இந்த ஆன்மீக ஆசான்களின்  பரிபூரணங்களிலிருந்து வஞ்சிக்கப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நபிமார்களுக்கு (அலைஹிமுஸ்-ஸலவாத் வத்-தஸ்லீமாத்) பிறகு,அமீருல் முஃமினீன் ஸித்தீகுல் அக்பர்  ஸெய்யிதினா ஹழ்ரத்  அபூபக்கர்  رضي الله عنه அவர்கள் அனைவரையும் விட அந்தஸ்த்தில்  உயர்ந்தவர்கள் என்ற உண்மையின் மீது ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஒருமித்த கருத்து (இஜ்மா) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருமித்த கருத்தை எதிர்ப்பவன் ஒரு முட்டாள் ( அஹ்மக்) ஆவான்.

- மக்தூபாத் இமாம் ரப்பானி, பாகம்  1, பக்கம் 202.



Monday, 15 September 2025

முஹத்திஸீன்களின் மவ்லித்

9ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் மவ்லிதுந்நபி குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 


أن أصل عمل المولد الذي هو اجتماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمد لهم سماط يأكلونه وينصرفون من غير زيادة على ذلك هو من البدع الحسنة التي يثاب عليها صاحبها لما فيه من تعظيم قدر النبي صلى الله عليه وسلم وإظهار الفرح والاستبشار بمولده الشريف

" மவ்லித் யதார்த்தம்  என்னவென்றால், மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி, தங்களுக்கு எளிதான அளவில் குர்ஆனை ஓதுகிறார்கள், மேலும் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய அறிவிப்புகளையும் , அவர்களின் பிறப்பின் போது நிகழ்ந்த அடையாளங்களையும் விவாதிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது, மேலும் அவர்கள் இந்த "பித்அத் ஹசனா"வுக்கு வேறு எதையும் சேர்க்காமல் திரும்பிச் செல்கிறார்கள். இதை ஏற்பாடு செய்பவர், பூமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மதித்து, அவர்களின் பிறப்புக்கு நன்றி செலுத்துவதற்காக தவாப் (நற்பலன்) பெறுகிறார். 


[ 📕 இமாம் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ , அல் ஹாவி லில் ஃபதாவி, தொகுதி 1, பக்கம் 292, மக்தபா அல் அஸ்ரிய்யா, பெய்ரூத், லெபனான் வெளியீடு]

Friday, 12 September 2025

முஹத்திஸீன்களின் மவ்லித்

🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹

முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது  முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு  1426) அவர்கள் சமீபகாலத்தில் இஸ்லாமிய உம்மத்தின் பெரும் அறிஞராக அறியப்பட்டவர்கள்.


எம்பெருமானார்  ﷺ அவர்களது திருப்பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஸெய்யிதினா ஹஸன் رضي الله عنه  அவர்களது பாரம்பரித்தில் வந்தவர்கள்.

அன்னவர்களது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மக்கா முகர்ரமாவில் மாலிகி மத்ஹபின் இமாமாக மக்களுக்கு பணிபுரிந்தனர்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பாட்டனார் ஸெய்யது அப்பாஸ் அலவி அல்மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மக்கா முகர்ரமாவின் முப்தி மற்று காழீயாகவும்,இமாமாகவும்,கதீபாகவும் மார்க்கப் பணியாற்றினார்கள்.

அன்னார் இப்பணிகளை உஸ்மானிய கிலாபத்தின் போதும்,பின்னர் ஹாஷிமியாக்களது ஆட்சியலும்,அதன் பின்னர் இன்று 200 வருடங்கள் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நவீன சவூது ஆட்சியிலும் தொடர்ந்தனர். அன்றைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவூது இவர்பால் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ,தகப்பனார் ஸெய்யது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாற்பதாண்டு காலம் மக்கா முகர்ரமாவில் பல்வேறு இஸ்லாமிய உலூம்களை கற்பித்துக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

தமது தகப்பனாரிடம் இஸ்லாமிய கல்வியை கற்ற இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,தமது 15 வது வயதில் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் உடைய கல்வியை ஹரம்ஷரீபில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பகால கல்வியை கற்ற பின்னர்,தமது 25 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ' அல் அஸ்கர்' பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சியானார்கள்.

இஸ்லாமிய உலகெங்கும் பயணித்து மக்ரிப் முதல் மஷ்ரிக் வரை மார்க்கக் கல்வியை பல்வேறு உலமாக்களிடம் கற்றார்கள்.

மவ்லிதுந்நபி  ﷺ ஏன் கொண்டாடுகிறீர்கள் ? ,மற்றும் இன்னபிற ஆட்சேபனைகளுக்கு இரத்தின சுருக்கமாக பின்வருமாறு தமது மவ்லிது குறித்து நூலில் பதிலுரைத்தார்கள்,



"  நான் மவ்லிதுந்நபி  கொண்டாடுகின்றேன் ஏனெனில் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன், நான் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன் ஏனெனில் நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன், நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன் ஏனெனில் நான் ஒரு முஃமின் "

📕 ஹவ்ல் அல்இக்திபால் பீ திக்ரி மவ்லித் அல்நபி அஷ்ஷரீப்,இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ


Wednesday, 10 September 2025

லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்த மவ்லிதுந்நபி இரவு !

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது சமகாலத்தவரும்,ஸஹீஹ் புஹாரியின் புகழ்பெற்ற விளக்கவுரையான " இர்ஷாத் அல்சாரி பீ ஷரஹுல் புஹாரி" யின் எழுத்தாளருமான மிஸ்ர் நாட்டைச் சார்ந்த இமாம் ஷஹாபுத்தீன் அபுல் அப்பாஸ் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள்( மறைவு 924 ஹிஜ்ரி)  தமது உலகப் புகழ்பெற்ற நூலான அல்மவாஹிபுல்லதுனியாவில் 
எழுதுகின்றார்கள்,

எம்பெருமான் முஹம்மது நபி  ﷺ அவர்களின் பிறந்த இரவு மூன்று காரணங்களால் உயர்ந்தது:

முதல் காரணம்:
மவ்லித் இரவில் அண்ணல்  நபி  ﷺ  அவர்கள் இவ்வுலகிற்கு வந்தார்கள், அதேசமயம் லைலத்துல் கத்ர் (விதியின் இரவு) அவர்களது பிறந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, அண்ணல் நபி  ﷺ அவர்களின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றை விட உயர்ந்தது. ஆகவே, மவ்லித் இரவு மிகவும் புண்ணியமானது.

இரண்டாவது காரணம்

லைலத்துல் கத்ர் இரவு புண்ணியமானது, ஏனெனில் அந்த இரவில் மலக்குகள் (வானவர்கள்) இறங்குகின்றனர். ஆனால், மவ்லித் இரவில் பூமான் நபி  ﷺ அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். ஸெய்யிதுல் அன்பியா பூமான் நபி  ﷺ அவர்கள் மலக்குகளை விட உயர்ந்தவர்கள். எனவே, மவ்லித் இரவு மிகவும் உயர்ந்தது.

மூன்றாவது காரணம்:
லைலத்துல் கத்ர் இரவு மூலம் எம்பெருமானார் முஹம்மது  ﷺ  அவர்களின் உம்மத்திற்கு மேன்மை வழங்கப்பட்டது. ஆனால், மவ்லித் இரவு மூலம் அனைத்து படைப்புகளுக்கும் பாக்கியம் வழங்கப்பட்டது, ஏனெனில் காத்தமுந்நபியான முஹம்மது ரஸுல்  ﷺ அவர்கள் உலகங்களுக்கு ரஹ்மத்தாக (கருணையாக)- ரஹ்மதுல்ஆலமீனாக  அனுப்பப்பட்டார்கள் (குர்ஆன் 21:107). ஆகவே, இந்த ரஹ்மத்  அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானதாக ஆனது.

📕 ஆதார நூல் : இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அல்-மவாஹிப் அல்-லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 145. மேலும், இமாம் ஸர்கானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அவர்களின் ஷரஹு அல்-முவாஹிப் லுதுன்னியா, தொகுதி 1, பக்கங்கள் 255-256-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) மேலும் கூறினார்கள. : 
"நபியவர்களின் பிறந்த மாதத்தின் இரவுகளை கொண்டாட்டமாக மாற்றுபவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! இதன் மூலம், இதயத்தின்  நோய் மற்றும் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் குறையும்." [அல்-மவாஹிப், தொகுதி 1, பக்கம் 148]

Monday, 8 September 2025

மவ்லிதுந்நபி குறித்து ஹாபிழ் இப்னு கதீர் ‎رَحِمَهُ ٱللَّٰهُ‏


மவ்லிதுந்நபியின் இன்றைய கொண்டாட்ட நடைமுறை பாத்திமி ஷியாக்களுடையது என்றும், பைத்துல் முகத்தஸை வென்றெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மைத்துனர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் குறித்தும் வஹாபிகள் மோசடியான திரிக்கப்பட்ட கருத்துகளை - அம்மன்னர் பாஸிக்காகவும்(பாவி),கொடுங்கோலன் என்றும்,பித்அத்தி என்றும் வாய் கூசாமல் அல்லாஹ்,ரஸுலுக்கு அஞ்சாமல் பொய் பரப்புகின்றனர்.

வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும் இமாம் ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,மன்னர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் பற்றி பின்வருமாறு தமது நூலில் எழுதுகின்றனர், 


أحد الاجواد والسادات الكبراء والملوك الامجاد له آثار حسنة وقد عمر الجامع المظفري بسفح قاسيون وكان قدهم بسياقه الماء إليه من ماء بذيرة فمنعه المعظم من ذلك واعتل بأنه قد يمر على مقابر المسلمين بالسفوح وكان يعمل المولد الشريف في ربيع الاول ويحتفل به احتفالا هائلا وكان مع ذلك شهما شجاعا فاتكا بطلا عاقلا عالما عادلا رحمه الله وأكرم مثواه وقد صنف الشيخ أبو الخطاب ابن دحية له مجلدا في المولد النبوي سماه التنوير في مولد البشير النذير فأجازه على ذلك بألف دينار وقد طالت مدته في الملك في زمان الدولة الصلاحية وقد كان محاصر عكا وإلى هذه السنة محمودالسيرة والسريرة قال السبط حكى بعض من حضر سماط المظفر في بعض الموالد كان يمد في ذلك السماط خمسة آلاف راس مشوى وعشرة آلاف دجاجة ومائة ألف زبدية وثلاثين ألف صحن حلوى


அவர் அளவற்ற ஈகைபுரிபவர், வல்லமைமிக்க எஜமானர், மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்; அவரது செயல்கள் மிகவும் சிறப்பானவை. அவர் காசியூன் அருகில் ஜமியா அல் முழஃபரி என்னும் அரபுக் கல்லூரியைக்  கட்டினார். ரபிஉல் அவ்வல் மாதத்தில் அவர் மவ்லித் அஷ் ஷரீஃபை (يعمل المولد الشريف في ربيع الاول) பெரிய கொண்டாட்டத்துடன் நடத்துவது வழக்கம். மேலும், அவர் அன்புள்ளவர், தைரியமானவர், ஞானமுள்ளவர், அறிஞர், மற்றும் நீதியுள்ள நபர் . அன்று வாழ்ந்து வந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞரான ஷெய்கு அபுல் கத்தாப் (رَحِمَهُ ٱللَّٰهُ )  மன்னரின் வேண்டுகோளை ஏற்று  மவ்லித் அந் நப்வி பற்றிய ஒரு நூலை எழுதினார், அதன் பெயர் “அல்-தன்விர் ஃபி மவ்லித் அல் பாஷிர் அல் நஸீர்”, அதற்காக மலிக்குல் முஸப்பர் அவருக்கு 1000 தினார்கள் வழங்கினார். அவரது ஆட்சி சலாஹியா ஆட்சி வரை நீடித்தது, அவர் அகா நகரை  கைப்பற்றினார், மற்றும் அவர் மரியாதைக்குரிய நபராக இருந்தார்.

அல்-சப்த் என்பார் கூறுகிறார், முஸப்ஃபர் நடத்திய மவ்லித் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் அங்கு மன்னரின் விருந்தோம்பலை விவரிக்கையில் : மன்னர் மலிக்குல் முஸப்பர்  5000 நன்கு வேகவைக்கப்பட்ட ஆடுகளை, 10,000 கோழிகளை, 100,000 பால்கிண்ணங்களை (பால்) மற்றும் 30,000 மிட்டாய் தட்டுகளை (இனிப்புகள்) மேசையில் நிரப்புவது வழக்கம் என்று கூறினார்.

[ நூல் : தாரீக் இப்னு கதீர், அல் பிதாயா வந்நிஹாயா,பாகம் 13,பக்கம் 174 ] 




Sunday, 31 August 2025

மஷாயிகுமார்களது மீலாத்

அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் மவ்லீத்  மறுப்பாளர்கள் மற்றும் வஹாபிச கொள்கையை ஏற்று தடம் புரண்ட
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி,மவ்லவி காஸிம் நானொத்வி,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ஆகியோர் பைஅத்தும்,கிலாபத்தும்  பெற்றனர்.

அவர்கள் தமது வஹாபிச கொள்கையை பரப்பிட மவ்லீது கொண்டாடுவது கூடாது,ஷிர்க் ,பித்அத் என்று வஹாபிச பத்வாக்கள் அளித்து குழப்பம் விளைவித்த பொழுது அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மற்றொரு கலீபாவான அல்லாமா முப்தி முஹம்மது அப்துல் சமீ சஹரான்பூரி رَحِمَهُ ٱللَّٰهُ மவ்லித் மறுப்பாளர்களான தமது சக தோழர்களுக்கு மறுப்பரையாக எழுதிய நூல் " அன்வாரே சாத்தியா" .இதற்கு ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதன்பின்னர் , தமது மாணவர்களிடையே உண்டான கொள்கை வேறுபாட்டில் ,தமது நிலைப்பாட்டை விளக்கி எழுதிய நூல் " பைஸ்லா ஹப்த் மஸலா" .

இதில் குறிப்பாக மீலாத் குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 

" மீலாதுந் நபி  ﷺ ஷரீப் கொண்டாடுவது இம்மை ,மறுமையின் கைர்-பரக்கத்திற்கான அமல்.இதனை பித்அத்தான செயல் என்று கூறுபவர் கெட்ட நஸீபுக்காரன்" 

📕 பைஸ்லா ஹப்த் மஸலா,பக்கம் 22-23

இந்நூல் வெளியானதும் அவரது மவ்லவி மாணவர் ரஷீத் அஹ்மது கங்கோஹி இந்நூலை எரித்ததோடு மட்டுமில்லாமல் ,ஆலிமல்லாத நபரிடம் ஆலிமாக தான் பைஅத் எடுத்ததைப் பற்றி வருந்தினார்.

ஆனால் இத்தகைய கடும்போக்கு வஹாபிகளை இறைநேசர்களாக தேவ்பந்திகளை ஆதரிக்கும் போலியா தரீக்காக்கள் ( ஆரணி தரீக்கா,நூரிஷா தரீக்கா போன்றவை) பிரச்சாரம் செய்வதோடு தமது நூற்களில் பகிரங்கமாக எழுதியும், மவ்லவி ரஷீத் அஹ்மது உண்மையைத்தான் எழுதினார் என கூசாமல் துணிந்து நாங்களும் தரீக்கத்வாதிகள் என்று  வஹாபிய பிரச்சாரம் செய்து வருகின்றனர். நவூதுபில்லாஹ் ! 

இதன் தொடர்ச்சியாகவே தேவ்பந்த் பத்வாக்கள் மீலாத் கொண்டாடுவது கூடாது என்று இன்றும் இணையதளத்திலும் உள்ளது .


இவர்கள் ஷெய்குக்கு மாற்றமாக நடக்கும் முரீது பற்றி ஸுலூக்கு உடைய கிரந்தங்களை அல்லது குறைந்தபட்சம் குத்பே வேலூர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பத்வாவையாவது படிக்க வேண்டும்.

வரலாற்றில் மவ்லிதுந்நபி  ‎ﷺ

🌹மவ்லிதுந்நபி  ﷺ 🌹

இப்னு ஜுபைர் அந்தலூஸி ( 540 -614 ஹிஜ்ரி) ,இப்னு பதூதா போன்று இஸ்லாமிய ஆட்சி பகுதிகளிலும்,பிற பகுதகளிலும்  பயணங்கள் மேற்கொண்டு  " ரிஹாலா இப்னு ஜுபைர்" என்ற பயணக்குறிப்பை எழுதியுள்ளார் . கிரானடாவில் இருந்து துவங்கி அலெக்ஸாந்திரயா சென்று பின்னர் எகிப்தின் ,கெய்ரோ நகரை அடைந்தார். அங்கு அப்போது 'பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த '  ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்.
பின்னர் சிஸிலி,மக்கா முகர்ரமா,மதீனா முனவ்வரா,தமாஸ்கஸ்,மொஸுல்,பக்தாத் நகரங்களுக்கு பயணம் செய்தார்.இப்னு ஜுபைர் தமது பயணக் குறிப்புகளில் தாம் பயணம் செய்த இடங்களின் வெகுவான விளக்கத்தையும்,புவியியல் விளக்கங்களையும் குறித்துள்ளார். 

ஹிஜ்ரி 579 ல் மக்கா முகர்ரமாவிற்கு தாம் விஜயம் செய்த பொழுது,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் பிறந்த வீட்டில் ,ஒரு மஸ்ஜித் எழுப்பப்பட்டு ,தங்கம்,வெள்ளி கொண்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்ததென்றும்,ரபீயுல் அவ்வல் மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு ,மக்கள் அனைவரும் அங்கு பரக்கத்தை நாடி செல்வதாகவும்,ஏனெனில் இம்மாதத்தில் ,திங்கட்கிழமை எம்பெருமானார்  ﷺ அவர்களது பிறந்த தினமாக இருப்பதால் என்று எழுதுகின்றார்.

 📚 ரிஹாலா இப்னு ஜுபைர் . 

அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களது தாயார் அல்- கைஸுரான் அம்மையார் அவ்வீட்டினை வாங்கி,மக்கள் தொழவும் ,நாயகம்  ﷺ பிறந்த வீட்டினை வந்து காணவும் அங்கு பள்ளி ஒன்றை எழுப்பினார்.
அப்பாஸிய கலீபா அஹ்மது அல்-நஸீர் அதனை ஹிஜ்ரி 576ல் புனர்நிர்மாணம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டு வரை அங்கு பள்ளி இருந்தது.

1950ல் உஸ்மானிய கிலாபத்தை ஆங்குலேய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் வீழ்த்திய அன்றைய ஸவூதி அரசு பல இஸ்லாமிய பாரம்பரிய வரலாற்று கட்டிடங்களை இடித்தது.இந்த நடவடிக்கைகளால் ,அன்றைய மக்கா  மேயர்,ஷெய்கு அப்பாஸ் யூசுப் கத்தான்  ,எம்பெருமானார்  ﷺ பிறந்த வீட்டின் சட்டபூர்வ ஆவணத்தை சமர்பித்து அவ்விடத்தில் ஒரு நூலகத்தை கட்டுவதற்கு 1953ல் ஆவண செய்தார்.

இன்று அங்கு ஒரு நூலகம் உள்ளது.

Thursday, 28 August 2025

மவ்லித் குறித்து அல்லாமா அப்துல் ஹை லக்னவி பிரங்கிமஹல்லி

அல்லாமா அப்துல் ஹை லக்னவி  ஹனபி முஹத்திஸ் பிரங்கிமஹல்லி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்திய முஸ்லிம் மார்க்க தளத்தில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர்கள்.

அன்னார் பாந்தா நகரில் அக்டோபர் 24,1848 ல் பிறந்தார்கள்.ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஃபிரங்கிமஹல் குடும்பத்தில் இருந்து வந்தார்கள்.தமது 11வது வயதில் குர்ஆனை மனனம் செய்து,தமது 17 வது தீனின் அனைத்து உலூம்களையும் ( ஸர்ப் முதல் தப்ஸீர் பைளாவி வரை)  கற்றுத் தேர்ந்தார்கள்.

தமது தகப்பானர் அல்லாமா அப்துல் ஹலீம் அவர்களிடமும் ,அன்னாரது ஆசிரியர் மவ்லானா முஹம்மது நிஃமதுல்லாஹ் அவர்களிடமும் மார்க்க கல்வி கற்றார்கள்.ஹதீஸ்களின் இஜாஸத்தை முப்தியே மக்கா அல்லாமா ஜைனீ தஹ்லான் மக்கீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் பெற்றார்கள்.மக்காவின் ஹன்பலி முப்தி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் மற்றும
ஷாஹ் அப்துல் கனி முஹத்திஸ் திஹ்லவி ஆகியோரிடமும் இஜாஸத் பெற்றார்கள்.

மத்ஹப் மறுப்பாளர்களான அஹ்லே ஹதீஸ் என்னும் நவீன பித்அத்தான கூட்டத்தாரின் இமாமான நவாப் சித்தீக் ஹசன் போபாலிக்கு மறுப்புரையாக " ரஸாயில்" ஒன்றினை எழுதினார்கள்.

அன்னார் 109 புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.அவற்றுள் நான்கு குறிப்படத்தக்க புத்தகங்கள் நான்கு தனித்துவமான உலூம்களில் எழுதப்பட்டவை.அன்னார் இந்த நான்கு புத்தகங்களை மட்டுமே எழுதியிருந்தாலும் ,அவை மட்டும் அன்னாரது இஸ்லாமிய ஆளுமையை பறைசாற்ற போதுமானது.

இதில் இல்முல் கலாமுடைய புத்தகமான " மி்ஸ்பாஹ் அல்துஜா" - ( மீர் ஜாஹித் எழுதிய "ரிஸாலா குத்பியா நூலின் விளக்கவுரை) .
அன்னாரது மற்றுமிரண்டு புகழ்பெற்ற கலாமுடைய நூற்கள் " ஹவாஷி அல் கியாலிய்யா ஷரஹ் அல் அகாயித் " மற்றும் " ஷரஹ் அகாயித் அல் நசபிய்யா" ஆகியவற்றின் மீதான அன்னாரின் விளக்கவுரைகள்.

தமது 38 வது வயதில் ரபீயுல் அவ்வல் ,ஹிஜ்ரி 1304ல் மரணத்தை தழுவினார்கள்.

இஸ்லாமிய  ஆளுமையான அல்லாமா அப்துல் ஹய் லக்னவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், பரேலியுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர், ஆனால் பரேலவி, தேவ்பந்தி, வஹாபி, கைர் முகல்லித் ஆகிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவருடைய ஃபதாவாக்களில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்:

அதாவது, இந்த உண்மை (மீலாது ஷரீஃப்) நபிகள் நாயகம்  ﷺ  மற்றும் சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) காலத்தில் இருந்தது, இருப்பினும் இந்தப் பெயர் இல்லை. ஹதீஸ் வல்லுநர்களுக்கு இது மறைவாக இருக்காது, சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) அறிவுரை மற்றும் கல்வி மஜ்லிஸ்களில் நபிகளின் பெருமைகளையும், அஹ்மது நபி  ﷺ பிறப்பின் தன்மையையும் குறிப்பிட்டார்கள்.

[ 📕 மஜ்மூஆத்துல் ஃபதாவா, அல்லாமா அப்துல் ஹய் லக்னவி (رَحِمَهُ ٱللَّٰهُ), தொகுதி 1, பக்கம் 60]

இதன் மூலம், மீலாது மஜ்லிஸ் நபிகளின் காலத்தில் மட்டுமல்ல, சஹாபாக்களின் காலத்திலும் இருந்தது என்பது தெரியவருகிறது.

Saturday, 23 August 2025

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி அவர்களது மவ்லித் பங்கேற்பு !

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்,குத்புல் இர்ஷாத்,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா   ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் ( மறைவு ஹிஜ்ரி 1176 - 1762 AD )  , மக்கா முகர்ரமாவில் நடைபெற்ற  மவ்லித் நிகழ்வில் தாம் பங்குபெற்றதைக் குறித்து எழுதுகின்றனர்,

" நான் மக்கா முகர்ரமாவில் இருந்த பொழுது ,ரபீயுல் அவ்வல் அன்று மக்கள் பூமான் நபி  ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி ,அண்ணல் நபி  ﷺ அவர்களது பிறப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறுவர்.அந்த புனித இரவில்  பேரொளி தோன்றியதை நான் அனுபவப்பூர்வமாக கண்டேன் "
 
📕 புயூத் அல் ஹரமைன்,இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி  قدس الله سره العزيز 
 
Related Posts Plugin for WordPress, Blogger...