Saturday, 25 October 2025

பெருமானாரின் முஃஜிஸாத்


இமாம் இஸ்பஹானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்:

"யாராகிலும்  : 'ஹஸ்ரத்  ஸெய்யிதினா ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் அனுமதியுடன் மரித்தவர்களை உயிர்ப்பித்தார்கள்,' என்று கூறினால் 

அதற்கு நாம் கூறுவோம்: இதைவிட மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் தஆலா நமது நபி கரீம் முஹம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தரஜாவை உயர்த்தினான். அண்ணல் நபி  ﷺ அவர்களுக்கு  ஒரு தெளிவான அடையாளத்தை வழங்கினான், இதைப் பலரும் கண்டனர். 

நாயகத் தோழர் ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இறந்துபோன ஆட்டை உயிர்ப்பித்து வைத்தான். மேலும், ஒரு அன்ஸாரி பெண்ணின் மகனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அல்லாஹ் தஆலா உயிர்ப்பித்தான். இவை இரண்டுமே மிகவும் ஆச்சரியமான அற்புதங்களாகும், இவை நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபித்துவத்தின் மற்றும் உண்மையின் அடையாளங்களாகும்."

📔(நூல்: தலாயிலுந்நுபுவ்வா, பக்கம் 616)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...