இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா ,குத்புல் இர்ஷாத் இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்களது மகனார் 13ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹாதித் தெஹல்வி رضي الله عنه நவீன வழிகெட்ட கொள்கைவாதிகளுக்கு மறுப்புரையாக தமது தப்ஸீரில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்
கேள்வி :
அவ்லியாக்களின் கப்ர் (மஸார்) அருகே உதவி கேட்க ஏன் செல்கிறார்கள், அவர்கள் தான் இறந்துவிட்டார்களே?
பதில்:
ஜிஸ்முக்கும் (உடலுக்கும்) ரூஹுக்கும் (ஆன்மாவுக்கும்) தொடர்பு உள்ளது.
அவ்லியாக்களை அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியின்றி சுயமான தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாக நம்புவது ஷிர்க் ஆகும்.
அதாவது, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரின் மஸார்களுக்கு செல்வது இத்தகைய கொள்கைகளில் விடுபட்டது.
No comments:
Post a Comment