Sunday, 31 August 2025

மஷாயிகுமார்களது மீலாத்

அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் மவ்லீத்  மறுப்பாளர்கள் மற்றும் வஹாபிச கொள்கையை ஏற்று தடம் புரண்ட
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி,மவ்லவி காஸிம் நானொத்வி,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ஆகியோர் பைஅத்தும்,கிலாபத்தும்  பெற்றனர்.

அவர்கள் தமது வஹாபிச கொள்கையை பரப்பிட மவ்லீது கொண்டாடுவது கூடாது,ஷிர்க் ,பித்அத் என்று வஹாபிச பத்வாக்கள் அளித்து குழப்பம் விளைவித்த பொழுது அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மற்றொரு கலீபாவான அல்லாமா முப்தி முஹம்மது அப்துல் சமீ சஹரான்பூரி رَحِمَهُ ٱللَّٰهُ மவ்லித் மறுப்பாளர்களான தமது சக தோழர்களுக்கு மறுப்பரையாக எழுதிய நூல் " அன்வாரே சாத்தியா" .இதற்கு ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதன்பின்னர் , தமது மாணவர்களிடையே உண்டான கொள்கை வேறுபாட்டில் ,தமது நிலைப்பாட்டை விளக்கி எழுதிய நூல் " பைஸ்லா ஹப்த் மஸலா" .

இதில் குறிப்பாக மீலாத் குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 

" மீலாதுந் நபி  ﷺ ஷரீப் கொண்டாடுவது இம்மை ,மறுமையின் கைர்-பரக்கத்திற்கான அமல்.இதனை பித்அத்தான செயல் என்று கூறுபவர் கெட்ட நஸீபுக்காரன்" 

📕 பைஸ்லா ஹப்த் மஸலா,பக்கம் 22-23

இந்நூல் வெளியானதும் அவரது மவ்லவி மாணவர் ரஷீத் அஹ்மது கங்கோஹி இந்நூலை எரித்ததோடு மட்டுமில்லாமல் ,ஆலிமல்லாத நபரிடம் ஆலிமாக தான் பைஅத் எடுத்ததைப் பற்றி வருந்தினார்.

ஆனால் இத்தகைய கடும்போக்கு வஹாபிகளை இறைநேசர்களாக தேவ்பந்திகளை ஆதரிக்கும் போலியா தரீக்காக்கள் ( ஆரணி தரீக்கா,நூரிஷா தரீக்கா போன்றவை) பிரச்சாரம் செய்வதோடு தமது நூற்களில் பகிரங்கமாக எழுதியும், மவ்லவி ரஷீத் அஹ்மது உண்மையைத்தான் எழுதினார் என கூசாமல் துணிந்து நாங்களும் தரீக்கத்வாதிகள் என்று  வஹாபிய பிரச்சாரம் செய்து வருகின்றனர். நவூதுபில்லாஹ் ! 

இதன் தொடர்ச்சியாகவே தேவ்பந்த் பத்வாக்கள் மீலாத் கொண்டாடுவது கூடாது என்று இன்றும் இணையதளத்திலும் உள்ளது .


இவர்கள் ஷெய்குக்கு மாற்றமாக நடக்கும் முரீது பற்றி ஸுலூக்கு உடைய கிரந்தங்களை அல்லது குறைந்தபட்சம் குத்பே வேலூர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பத்வாவையாவது படிக்க வேண்டும்.

வரலாற்றில் மவ்லிதுந்நபி  ‎ﷺ

🌹மவ்லிதுந்நபி  ﷺ 🌹

இப்னு ஜுபைர் அந்தலூஸி ( 540 -614 ஹிஜ்ரி) ,இப்னு பதூதா போன்று இஸ்லாமிய ஆட்சி பகுதிகளிலும்,பிற பகுதகளிலும்  பயணங்கள் மேற்கொண்டு  " ரிஹாலா இப்னு ஜுபைர்" என்ற பயணக்குறிப்பை எழுதியுள்ளார் . கிரானடாவில் இருந்து துவங்கி அலெக்ஸாந்திரயா சென்று பின்னர் எகிப்தின் ,கெய்ரோ நகரை அடைந்தார். அங்கு அப்போது 'பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த '  ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்.
பின்னர் சிஸிலி,மக்கா முகர்ரமா,மதீனா முனவ்வரா,தமாஸ்கஸ்,மொஸுல்,பக்தாத் நகரங்களுக்கு பயணம் செய்தார்.இப்னு ஜுபைர் தமது பயணக் குறிப்புகளில் தாம் பயணம் செய்த இடங்களின் வெகுவான விளக்கத்தையும்,புவியியல் விளக்கங்களையும் குறித்துள்ளார். 

ஹிஜ்ரி 579 ல் மக்கா முகர்ரமாவிற்கு தாம் விஜயம் செய்த பொழுது,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் பிறந்த வீட்டில் ,ஒரு மஸ்ஜித் எழுப்பப்பட்டு ,தங்கம்,வெள்ளி கொண்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்ததென்றும்,ரபீயுல் அவ்வல் மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு ,மக்கள் அனைவரும் அங்கு பரக்கத்தை நாடி செல்வதாகவும்,ஏனெனில் இம்மாதத்தில் ,திங்கட்கிழமை எம்பெருமானார்  ﷺ அவர்களது பிறந்த தினமாக இருப்பதால் என்று எழுதுகின்றார்.

 📚 ரிஹாலா இப்னு ஜுபைர் . 

அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களது தாயார் அல்- கைஸுரான் அம்மையார் அவ்வீட்டினை வாங்கி,மக்கள் தொழவும் ,நாயகம்  ﷺ பிறந்த வீட்டினை வந்து காணவும் அங்கு பள்ளி ஒன்றை எழுப்பினார்.
அப்பாஸிய கலீபா அஹ்மது அல்-நஸீர் அதனை ஹிஜ்ரி 576ல் புனர்நிர்மாணம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டு வரை அங்கு பள்ளி இருந்தது.

1950ல் உஸ்மானிய கிலாபத்தை ஆங்குலேய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் வீழ்த்திய அன்றைய ஸவூதி அரசு பல இஸ்லாமிய பாரம்பரிய வரலாற்று கட்டிடங்களை இடித்தது.இந்த நடவடிக்கைகளால் ,அன்றைய மக்கா  மேயர்,ஷெய்கு அப்பாஸ் யூசுப் கத்தான்  ,எம்பெருமானார்  ﷺ பிறந்த வீட்டின் சட்டபூர்வ ஆவணத்தை சமர்பித்து அவ்விடத்தில் ஒரு நூலகத்தை கட்டுவதற்கு 1953ல் ஆவண செய்தார்.

இன்று அங்கு ஒரு நூலகம் உள்ளது.

Thursday, 28 August 2025

மவ்லித் குறித்து அல்லாமா அப்துல் ஹை லக்னவி பிரங்கிமஹல்லி

அல்லாமா அப்துல் ஹை லக்னவி  ஹனபி முஹத்திஸ் பிரங்கிமஹல்லி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்திய முஸ்லிம் மார்க்க தளத்தில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர்கள்.

அன்னார் பாந்தா நகரில் அக்டோபர் 24,1848 ல் பிறந்தார்கள்.ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஃபிரங்கிமஹல் குடும்பத்தில் இருந்து வந்தார்கள்.தமது 11வது வயதில் குர்ஆனை மனனம் செய்து,தமது 17 வது தீனின் அனைத்து உலூம்களையும் ( ஸர்ப் முதல் தப்ஸீர் பைளாவி வரை)  கற்றுத் தேர்ந்தார்கள்.

தமது தகப்பானர் அல்லாமா அப்துல் ஹலீம் அவர்களிடமும் ,அன்னாரது ஆசிரியர் மவ்லானா முஹம்மது நிஃமதுல்லாஹ் அவர்களிடமும் மார்க்க கல்வி கற்றார்கள்.ஹதீஸ்களின் இஜாஸத்தை முப்தியே மக்கா அல்லாமா ஜைனீ தஹ்லான் மக்கீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் பெற்றார்கள்.மக்காவின் ஹன்பலி முப்தி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் மற்றும
ஷாஹ் அப்துல் கனி முஹத்திஸ் திஹ்லவி ஆகியோரிடமும் இஜாஸத் பெற்றார்கள்.

மத்ஹப் மறுப்பாளர்களான அஹ்லே ஹதீஸ் என்னும் நவீன பித்அத்தான கூட்டத்தாரின் இமாமான நவாப் சித்தீக் ஹசன் போபாலிக்கு மறுப்புரையாக " ரஸாயில்" ஒன்றினை எழுதினார்கள்.

அன்னார் 109 புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.அவற்றுள் நான்கு குறிப்படத்தக்க புத்தகங்கள் நான்கு தனித்துவமான உலூம்களில் எழுதப்பட்டவை.அன்னார் இந்த நான்கு புத்தகங்களை மட்டுமே எழுதியிருந்தாலும் ,அவை மட்டும் அன்னாரது இஸ்லாமிய ஆளுமையை பறைசாற்ற போதுமானது.

இதில் இல்முல் கலாமுடைய புத்தகமான " மி்ஸ்பாஹ் அல்துஜா" - ( மீர் ஜாஹித் எழுதிய "ரிஸாலா குத்பியா நூலின் விளக்கவுரை) .
அன்னாரது மற்றுமிரண்டு புகழ்பெற்ற கலாமுடைய நூற்கள் " ஹவாஷி அல் கியாலிய்யா ஷரஹ் அல் அகாயித் " மற்றும் " ஷரஹ் அகாயித் அல் நசபிய்யா" ஆகியவற்றின் மீதான அன்னாரின் விளக்கவுரைகள்.

தமது 38 வது வயதில் ரபீயுல் அவ்வல் ,ஹிஜ்ரி 1304ல் மரணத்தை தழுவினார்கள்.

இஸ்லாமிய  ஆளுமையான அல்லாமா அப்துல் ஹய் லக்னவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், பரேலியுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர், ஆனால் பரேலவி, தேவ்பந்தி, வஹாபி, கைர் முகல்லித் ஆகிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவருடைய ஃபதாவாக்களில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்:

அதாவது, இந்த உண்மை (மீலாது ஷரீஃப்) நபிகள் நாயகம்  ﷺ  மற்றும் சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) காலத்தில் இருந்தது, இருப்பினும் இந்தப் பெயர் இல்லை. ஹதீஸ் வல்லுநர்களுக்கு இது மறைவாக இருக்காது, சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) அறிவுரை மற்றும் கல்வி மஜ்லிஸ்களில் நபிகளின் பெருமைகளையும், அஹ்மது நபி  ﷺ பிறப்பின் தன்மையையும் குறிப்பிட்டார்கள்.

[ 📕 மஜ்மூஆத்துல் ஃபதாவா, அல்லாமா அப்துல் ஹய் லக்னவி (رَحِمَهُ ٱللَّٰهُ), தொகுதி 1, பக்கம் 60]

இதன் மூலம், மீலாது மஜ்லிஸ் நபிகளின் காலத்தில் மட்டுமல்ல, சஹாபாக்களின் காலத்திலும் இருந்தது என்பது தெரியவருகிறது.

Saturday, 23 August 2025

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி அவர்களது மவ்லித் பங்கேற்பு !

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்,குத்புல் இர்ஷாத்,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா   ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் ( மறைவு ஹிஜ்ரி 1176 - 1762 AD )  , மக்கா முகர்ரமாவில் நடைபெற்ற  மவ்லித் நிகழ்வில் தாம் பங்குபெற்றதைக் குறித்து எழுதுகின்றனர்,

" நான் மக்கா முகர்ரமாவில் இருந்த பொழுது ,ரபீயுல் அவ்வல் அன்று மக்கள் பூமான் நபி  ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி ,அண்ணல் நபி  ﷺ அவர்களது பிறப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறுவர்.அந்த புனித இரவில்  பேரொளி தோன்றியதை நான் அனுபவப்பூர்வமாக கண்டேன் "
 
📕 புயூத் அல் ஹரமைன்,இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி  قدس الله سره العزيز 
 

Tuesday, 12 August 2025

மிலாதுந் நபி ‎ﷺ ‏யின் ‎போது ‎அழுது ‎புலம்புவது



மிலாதுந் நபி ﷺ  யின் நாளில் அழுது புலம்புவோரின் முன்னோடி யார் ?  

கைர் முகல்லித் வஹாபிகளும்,தேவ்பந்தி தப்லீக்  வஹாபிகளும் ஈத் மிலாதுந் நபிﷺ அன்று ஏன் அழுது புலம்புகிறார்கள்?

இமாம் அபு காசிம் சஹ்லி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு 581 ஹிஜ்ரி) கூறுகிறார்கள்:
‎أن إبليس رن أربع رنات حين لعن وحين أهبط وحين ولد رسول الله صلى الله عليه وسلم وحين أنزلت الفاتحة

"இப்லீஸ் (ஷைத்தான்) நான்கு முறை அழுதான்: முதலாவதாக, அவன் மீது சாபமிடப்பட்டபோது, பின்னர் அவன் சுவனபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ரசூலுல்லாஹ்ﷺ அவர்களின் புனிதப் பிறப்பு நிகழ்ந்தபோது, மற்றும் சூரதுல் ஃபாத்திஹா இறக்கப்பட்டபோது."

📚 ஹாஃபிழ் இப்னு கசீர் رَحِمَهُ ٱللَّٰهُ (776 ஹிஜ்ரி), அல்-பிதாயா வந்-நிஹாயா, கெய்ரோ பதிப்பு, தொகுதி 2, பக்கம் 166]

எம்பெருமானார் கண்மணி நாயகம்  ﷺ அவர்களது மீலாதை மறுக்கும் வஹாபிகள் ,தங்களது நவீன கூட்டத்தின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமியின் பிறந்தநாளை ஒரு வாரத்திற்கு கொண்டாடலாம் என்று தமது நூலான " மஜ்மு பத்வா"  வழங்கிய தமது கூட்டத்தின் ஆகப்பெரிய அறிஞரான உதைமீன் மீது பத்வா வழங்காதது ஏன் ? முனாபிக்தனத்தின் உச்சமல்லவா இது ? 

Related Posts Plugin for WordPress, Blogger...