Monday, 15 September 2025

முஹத்திஸீன்களின் மவ்லித்

9ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் மவ்லிதுந்நபி குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 


أن أصل عمل المولد الذي هو اجتماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمد لهم سماط يأكلونه وينصرفون من غير زيادة على ذلك هو من البدع الحسنة التي يثاب عليها صاحبها لما فيه من تعظيم قدر النبي صلى الله عليه وسلم وإظهار الفرح والاستبشار بمولده الشريف

" மவ்லித் யதார்த்தம்  என்னவென்றால், மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி, தங்களுக்கு எளிதான அளவில் குர்ஆனை ஓதுகிறார்கள், மேலும் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய அறிவிப்புகளையும் , அவர்களின் பிறப்பின் போது நிகழ்ந்த அடையாளங்களையும் விவாதிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது, மேலும் அவர்கள் இந்த "பித்அத் ஹசனா"வுக்கு வேறு எதையும் சேர்க்காமல் திரும்பிச் செல்கிறார்கள். இதை ஏற்பாடு செய்பவர், பூமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மதித்து, அவர்களின் பிறப்புக்கு நன்றி செலுத்துவதற்காக தவாப் (நற்பலன்) பெறுகிறார். 


[ 📕 இமாம் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ , அல் ஹாவி லில் ஃபதாவி, தொகுதி 1, பக்கம் 292, மக்தபா அல் அஸ்ரிய்யா, பெய்ரூத், லெபனான் வெளியீடு]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...