Monday, 22 June 2026

ஸெய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுசைன் ‎رضي الله عنه

இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹீதாக்கப்படுதல் பற்றிய நபிமொழி முன்னறிவிப்பு

இஸ்லாமிய வரலாற்றில் பல ஷஹாதத்துகள் (தியாக மரணங்கள்) நிகழ்ந்துள்ளன. ஆனால் அவற்றில் மிகவும் அதிகமாக நினைவுகூரப்படுவது ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் இப்னு அலீ رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அண்ணல் நபி ﷺ அவர்கள், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சிறுவராக இருந்த காலத்திலேயே, தமது பேரனான ஹுஸைன் رضي الله عنه அவர்கள் கர்பலாவில் ஷஹீதாக்கப்படுவார்கள் என்று முன்னறிவித்திருந்தார்கள். இந்த விஷயம் பல ஸஹாபாக்களுக்கும் தெரிந்திருந்தது. மேலும், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களும் இதைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்.

இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத் உலக வரலாற்றில் தனித்துவமான ஒன்றாகும். அது மனிதகுலத்திற்கு உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் சிந்தனையை வழங்கியது. ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியை அடைய முடியும் என்பதை அது எடுத்துக்காட்டியது.

இன்று முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிமல்லாதவர்களும் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களைப் புகழ்ந்து பேசுகின்றனர். உலகில் அமைதியின் முன்னோடியாகக் கருதப்படும் மகாத்மா காந்தி கூட, சுதந்திரப் போராட்டத்தில் உறுதியையும் ஊக்கத்தையும் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் தியாக வரலாற்றிலிருந்து பெற்றதாகக் கூறப்படுகின்றது. அதுபோல, தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத் தலைவரான நெல்சன் மண்டேலாவும் சிறைவாசத்தின் போது இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வாழ்க்கையிலிருந்து மன உறுதியைப் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்:

“உலகம் விழித்தெழட்டும்;
ஒவ்வொரு சமூகமும் ‘ஹுஸைன் எங்களுடையவர்’ என்று முழங்கும்.”

ஆனால் சிலர், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தின் மகத்துவத்தைச் சிறுமைப்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள், யஸீதின் செயல்களை நியாயப்படுத்தவும், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் நினைவு நிகழ்வுகளை விமர்சிக்கவும் முயன்றனர். சிலர், “யஸீதைப் பற்றி தீயதாகப் பேச வேண்டாம்; அவர் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும், இன்னும் சிலர் “ஹுஸைன் رضي الله عنه ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்” என்றும் கூறினர். இத்தகைய கருத்துக்கள் மிகவும் தவறானவை.

இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நபி ﷺ அவர்கள் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தை முன்கூட்டியே பல இடங்களில் குறிப்பிட்டதாக வரும் ஹதீஸ்களில் ஒன்றை இங்கு காணலாம்.

ஹதீஸ் 1 – ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களின் அறிவிப்பு


அப்துல்லாஹ் இப்னு நஜீ அவர்கள் தமது தந்தையாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்:

ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப் رضي الله عنه அவர்களுடன் ஸிஃப்பீன் நோக்கிச் சென்ற பயணத்தில் அவர் உடன் இருந்தேன். அவர்கள் நைனவா (கர்பலா அருகிலுள்ள பகுதி) என்ற இடத்தை அடைந்தபோது உரக்கக் கூறினார்கள்:

“அபூ அப்தில்லாஹ்வே! (ஹுஸைனே!) ஃபுராத் நதிக்கரையில் பொறுமையாக இருங்கள்.
அபூ அப்தில்லாஹ்வே! ஃபுராத் நதிக்கரையில் பொறுமையாக இருங்கள்.”

அப்போது நான் கேட்டேன்:

“அமீருல் முஃமினீனே! இது என்ன விஷயம்?”

அதற்கு ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

“ஒருநாள் நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. நான் கேட்டேன்:

‘அல்லாஹ்வின் தூதரே! யாராவது உங்களை வருத்தினார்களா? ஏன் உங்கள் கண்களில் கண்ணீர் வழிகிறது?’

அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

‘இல்லை. இப்போதுதான் ஜிப்ரீல் عليه السلام என்னிடம் வந்துச் சென்றார். அவர், ஹுஸைன் ஃபுராத் நதிக்கரையில் கொல்லப்படுவார் என்று எனக்குத் தெரிவித்தார்.’

பின்னர் ஜிப்ரீல் عليه السلام என்னிடம்:

‘ஹுஸைன் ஷஹீதாக்கப்படவுள்ள இடத்தின் மண்ணை உங்களுக்கு நுகரச் செய்யவா?’ என்று கேட்டார்.

நான் ‘ஆம்’ என்றேன்.

உடனே அவர் ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். அதை பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் பெருகுவதை என்னால் தடுக்க முடியவில்லை.”

ஆதார நூற்கள் 📕 முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் ,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه, கிதாப் அலீ இப்னு அபீதாலிப், பாகம் 01,பக்கம் 255,ஹதீஸ் # 255

* இமாம் இப்னு அபீஷைபா رضي الله عنه , முஸன்னப் அபீ  ஷைபா, பாகம் 08,பக்கம் 378,ஹதீஸ் # 37367

* இமாம் மிஸ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ, தஹ்தீப் அல் கமால்,பாகம் 01,பக்கம் 407

* இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ,தஹ்தீப் அத்தஹ்தீப்,பாகம் 02,பக்கம் 300

* இமாம் முனாவி رَحِمَهُ ٱللَّٰهُ, பத்ஹுல் கதீர் ,பாகம் 01,பக்கம்  204-205

* இமாம் ஜியாவுத்தீன் மக்திஸி,அல் முக்தரா,பாகம் 02,பக்கம் 375,ஹதீஸ் எண் # 758

மேற்கண்ட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

ஹதீஸ் எண் 02:

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப்  رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்:

இமாம் அபூ நுஐம் அவர்கள் ஹழ்ரத்  அஸ்பக் பின் நபாதா (رحمه الله) அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:

"நாங்கள் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா மௌலா அலி رضي الله عنه அவர்களுடன் ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் கப்ர் அமைந்துள்ள இடத்தை அடைந்தோம். அப்போது ஸெய்யிதினா அலி رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

'இங்கேதான் அந்த ஷஹீதுகளின் குதிரைகள் கட்டப்படும்.
இங்கேதான் அவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தப்படும்.
இங்கேதான் அவர்களின் இரத்தங்கள் சிந்தப்படும்.
முஹம்மது ﷺ அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த மைதானத்தில் ஷஹீத்களாகுவார்கள்.
அவர்களுக்காக வானமும் பூமியும் அழும்.'


ஆதாரம்:

  • இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ,  கஸாயிஸுல் குப்ரா ,பாகம் 2, பக்கம் 214
  • இமாம் அபூநுஐம் رَحِمَهُ ٱللَّٰهُ,  தலாயிலிந் நுபுவ்வா, பாகம் 2, பக்கம் 147


ஹதீஸ் எண் : 3

حدثنا مؤمل حدثنا عمارة بن زادان حدثنا ثابت عن أنس بن مالك أن ملك القطر استأذن ربه أن يأتي النبي فأذن له، فقال لأم سلمة املكي علينا الباب لا يدخل علينا أحد، قال وجاء الحسين ليدخل فمنعته، فوثب فدخل فجعل يقعد على ظهر النبي صلى الله عليه وسلم وعلى منكبه وعلى عاتقه، قال: فقال الملك للنبي أتحبه؟. قال نعم. قال: أما إن أمتك ستقتله، وإن شئت أريتك المكان الذي يقتل فيه. فضرب بيده فجاء بطينة حمراء، فأخذتها أم سلمة فصرتها في خمارها. قال قال ثابت: بلغنا أنها كربلاء


ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக்  رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


ஒருமுறை மழைக்குப் பொறுப்பான வானவர் (மலக்கு) அண்ணல் நபி ﷺ அவர்களின் திருச்சந்நிதிக்கு வந்தார். அப்போது ஸெய்யிதினா இமாம் ஹுசைன் رضي الله عنه அவர்கள் வந்து அண்ணல் நபி ﷺ அவர்களின் மடியில் அமர்ந்தார்கள். உடனே அண்ணல் நபி ﷺ அவர்கள் அவர்களை முத்தமிட்டு, அன்புடன் அரவணைக்கத் தொடங்கினார்கள்.


அந்த வானவர் கேட்டார்: “யா ரசூலல்லாஹ் ﷺ! தாங்கள் இவரை மிகவும் நேசிக்கிறீர்களா?”


அண்ணல் நபி ﷺ அவர்கள்: “ஆம்” என்று பதிலளித்தார்கள்.


அப்போது அந்த வானவர் கூறினார்: “தங்களுடைய உம்மத்தில் சிலர் இவரைக் கொலை செய்து விடுவார்கள். தாங்கள் விரும்பினால், அவர் ஷஹீதாக்கப்படவிருக்கும் இடத்தின் மண்ணை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்.”


பின்னர் அந்த வானவர் சிவப்பு (செந்நிற) மண்ணை கொண்டு வந்து கொடுத்தார்.


அந்த மண்ணை உம்முல் முஃமினீன் ஸெய்யிதத்துனா உம்மு ஸலமா رضي الله عنها அவர்கள் தமது ஆடையில் பாதுகாத்து வைத்துக் கொண்டார்கள்.


ஸெய்யிதினா ஸாபித் அல்-புனானி رحمه الله அவர்கள் கூறுகின்றார்கள்:


“எங்களுக்கு வந்த செய்திப்படி, அந்த இடம் கர்பலா ஆகும்.”


ஆதார நூற்கள் 📕 முஸ்னத் அபூ யஃலா,பாகம் 6,பக்கம் 129,ஹதீஸ் எண்: 3402

தமிழாக்கம்:

இந்த ஹதீஸ் பின்வரும் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

  • இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله — அல்-முஸ்னத், உம்மு ஸலமா رضي الله عنها அவர்களின் ஹதீஸ், பாகம் 10, பக்கம் 180, ஹதீஸ் எண்: 26586.
  • இமாம் அல்-பஸ்ஸார் رحمه الله — அல்-முஸ்னத், ஹதீஸ் எண்: 2642.
  • இமாம் அல்-ஹைஸமி رحمه الله — மஜ்மஅுஸ் ஸவாயித், பாகம் 9, பக்கம் 217, ஹதீஸ் எண்: 15111.
  • நவீன கால ஸலபி வஹாபிய அறிஞர் நாசிருத்தீன் அல்-அல்பானி -  ஸில்சிலத்துல் அஹாதீஸ் அஸ்-ஸஹீஹா, பாகம் 2, பக்கங்கள் 465–466.

அல்பானி   அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி:

“இந்த ஹதீஸ், இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஸஹீஹானது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹதீஸ் பின்வரும் நூல்களிலும் இடம்பெற்றுள்ளது:

  • இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله — ஃபதாயிலுஸ் ஸஹாபா, பாகம் 2, பக்கங்கள் 965–966, ஹதீஸ் எண்: 1357.
  • இமாம் தபரானி رحمه الله — அல்-முஅ்ஜமுல் கபீர், பாகம் 3, பக்கம் 107, ஹதீஸ் எண்: 6814 (அல்லது 2814).
  • இமாம் இப்னு ஹிப்பான் رحمه الله — ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் 15, பக்கம் 142, ஹதீஸ் எண்: 6742.

இந்த ஹதீஸ் ஹஸன் (நல்ல தரமுடையது) எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல்:

  • இமாம் அபூ நுஐம் رحمه الله — தலாயிலுன் நுபுவ்வா, பாகம் 1, பக்கம் 553, ஹதீஸ் எண்: 492.
  • இமாம் பய்ஹகீ رحمه الله — தலாயிலுன் நுபுவ்வா, பாகம் 6, பக்கம் 469.
  • இமாம் தஹபி رحمه الله — ஸியரு அஅ்லாமின் நுபலா, பாகம் 3, பக்கங்கள் 288–289.
  • இமாம் அல்-மிஸ்ஸி رحمه الله — தஹ்தீபுல் கமால், பாகம் 6, பக்கம் 408.
  • இமாம் ஹுஸாமுத்தீன் அல்-ஹிந்தி رحمه الله — கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண்: 37672.
  • இமாம் ஸுயூதி رحمه الله — அல்-கஸாயிஸுல் குப்ரா, பாகம் 2, பக்கம் 450.

இந்நூல்கள் அனைத்தும் இமாம் ஹுசைன் رضي الله عنه அவர்களின் கர்பலா ஷஹாதத் குறித்து முன்னறிவிப்பு இடம்பெற்ற இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளன.

Wednesday, 17 June 2026

நாயகத் தோழர் ஹழ்ரத் முஆவியா ‎رضي الله عنه

ஆரம்பகால ஷாதிலி ஸூபி  மகான்கள் நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா முஆவியா رضي الله عنه  அவர்கள் குறித்து வழங்கிய உரைக்குறிப்புகள்.


இமாம் அபுல் ஹசன் அல்-ஷாதிலி (மறைவு : கி.பி. 1258) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா   தரீக்காவின் ஆரம்பகால மகான்கள், அண்ணல் நபி  ﷺ அவர்களது  தோழர்களுக்கு (ஸஹாபாக்கள்) இடையே ஏற்பட்ட வரலாற்று ரீதியான கருத்து வேறுபாடுகளை, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் முறையான இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அணுகினர். 'கஃபுல் லிஸான்' (குறை கூறுவதிலிருந்து நாவைக் காப்பது) மற்றும் 'இம்ஸாக்' (அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  மற்றும் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه  ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவகாரங்களில் மௌனம் காப்பது) ஆகிய கொள்கைகளில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  அவர்களே நேர்வழி நின்ற கலீஃபா (இமாமுல் ஹக்) மற்றும் சத்தியத்திற்கு மிக நெருக்கமானவர் என்றும்; அதே நேரத்தில், ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  உதுமான் துன்னூரைன் رضي الله عنه அவர்களின் கொலைக்கான பழிவாங்கும் விவகாரத்தில் தனது சுய சட்ட ஆய்வின் (இஜ்திஹாத்) அடிப்படையில் தவறான ஒரு முடிவை எடுத்தாரே தவிர, அது அவரை ஒரு ஸஹாபி என்ற தகுதியிலிருந்தோ, வஹி எழுதக்கூடிய எழுத்தாளர் என்ற சிறப்பிலிருந்தோ அல்லது முஃமின் (இறையம்பிக்கையாளர்) என்ற நிலையிலிருந்தோ தரம் தாழ்த்திவிடாது என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டனர் .


ஆரம்பகால ஷாதுலியா தரீக்கத்  மகான்களின் நூல்களிலிருந்து பெறப்பட்ட முக்கிய உரைக்குறிப்புகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. இமாம் இப்னு அதாஇல்லாஹ் அல்-இஸ்கந்தரி ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ (மறைவு : கி.பி. 1309)

தனது 'ஹிகம்'  நூலின் மூலம் உலகப் புகழ்பெற்றவரான, ஷாதுலியா தரீக்காவின் மூன்றாவது தலைமை சற்குருவான இமாம் இப்னு அதாஇல்லாஹ் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் , தனது 📕  " மிஃப்தாஹ் அல்-ஃபலாஹ் வ மிஸ்பாஹ் அல்-அர்வாஹ்"  (வெற்றியின் திறவுகோலும் ஆன்மாக்களின் விளக்கும்) என்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின்  கொள்கை விளக்க நூலில் ஸஹாபாக்கள் குறித்த கோட்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மூல உரை:
'மிஃப்தாஹ் அல்-ஃபலாஹ்' நூலின் கொள்கை விளக்கப் பிரிவில், ஸஹாபாக்கள் குறித்து அஷ்அரீ/ஸூபி மரபின் அடிப்படை நம்பிக்கையை இமாம் இப்னு அதாஇல்லாஹ் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

"அல்லாஹ்வின் தூதருடைய ( ﷺ ) தோழர்களுக்கு இடையே நடந்த விவகாரங்களைப் பற்றி பேசுவதிலிருந்து நாம் நம் நாவுகளைக் காத்துக் கொள்கிறோம். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்களுக்குப் பிறகு சிருஷ்டிகளிலேயே மிகச் சிறந்தவர்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் தன் அடியார்களின் இருதயங்களை நோக்கினான்; அவற்றில் எம்பெருமானார்  முஹம்மது ( ﷺ ) அவர்களின் இருதயத்தையே மிகச் சிறந்த இருதயமாகக் கண்டு, அவரைத் தனக்காகத் தேர்ந்தெடுத்து, தனது தூதை வழங்கி அனுப்பினான்.

 அவருக்குப் பிறகு, மற்ற அடியார்களின் இருதயங்களை அல்லாஹ் நோக்கினான்; அவற்றில் அவருடைய தோழர்களின் இருதயங்களையே மனிதர்களில் மிகச் சிறந்த இருதயங்களாகக் கண்டு, அவர்களைத் தன் தூதரின் உதவியாளர்களாக ஆக்கினான்...
 
அவர்களுக்கு இடையே ஏற்பட்ட போர்கள் அனைத்தும் 'இஜ்திஹாத்' (மார்க்க சட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சுய ஆய்வு முடிவு) என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. அவர்களில் சரியான முடிவை அடைந்தவருக்கு இரு நன்மைகளும், தவறான முடிவை அடைந்தவருக்கு ஒரு நன்மையும்கூட உண்டு; மேலும் அவர்களின் தவறு மன்னிக்கப்பட்ட ஒன்றாகும்."


2. இமாம் அஹ்மத் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு : கி.பி. 1493)

இமாம் அஹ்மது ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள்   காலத்தால் பிற்பட்டவராக இருந்தாலும், ஷாதுலி தரீக்காவின் ஒழுங்குமுறை நெறியாளராக (முஹ்தஸிப் அத்-தரீக்கா) என்ற மேன்மைமிகு சிறப்பினால் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுடைய விளக்கவுரைகளே ஆரம்பகால ஷாதுலியா தரீக்காவின் ஒழுக்க நெறிகளுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றன. தனது புகழ்பெற்ற நூலான 📕 கவாயித் அத்-தஸவ்வுஃப் (தஸவ்வுஃபின் கோட்பாடுகள்) என்பதில், ஆன்மீகத் தூய்மை என்பது ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் மற்றும் இதர ஸஹாபாக்கள் மீது காட்டும் மரியாதையோடு நேரடியாகத் தொடர்புடையது என்று விளக்குகிறார்.
மூல உரை:
'கவாயித் அத்-தஸவ்வுஃப்' நூலின் விதி 43 மற்றும் விதி 96 ஆகியவற்றில் இமாம் அஹ்மது ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள்  எழுதுகிறார்கள்:

 "தஸவ்வுஃப் என்பது மார்க்கச் சட்டங்களை (ஷரீஅத்) பேணுவதிலும், எந்தவொரு முஃமினுக்கு எதிராகவும், குறிப்பாக இறைத்தூதரின் தோழர்களுக்கு எதிராகவும் உள்ள குரோதங்களிலிருந்து இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் அல்லது எந்தவொரு ஸஹாபாவையும் இழிவுபடுத்துபவர் ஆன்மீக எதார்த்தத்தின் (தஹ்கீக்) உயர் நிலையிலிருந்து வீழ்ந்துவிடுகிறார். 

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  மற்றும் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள்  இடையே நடந்த விவகாரங்களுக்கான தீர்ப்பு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களின் இந்த கூற்றே ஆகும்: 'அந்த இரத்தங்களிலிருந்து அல்லாஹ் நம் கைகளைத் தூய்மையாக வைத்திருந்தான், எனவே நாமும் நம் நாவுகளை அதிலிருந்து தூய்மையாக வைத்திருப்போம்.'"

📕  'ஷரஹ் அல்-அகீதா அத்-தஹாவிய்யா' நூலில்:
இமாம் தஹாவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் உன்னதமான கொள்கை விளக்க நூலுக்கு ( அகீதா தஹவியா) இமாம் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒரு விரிவுரை எழுதியுள்ளார்கள்; இது ஷாதுலிய்யா  ஜாவியாக்களில்  ஒரு முக்கிய பாடப்புத்தகமாகும். 

அதில் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள்  பற்றி இமாம் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகிறார்கள்:

"ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه இறைவஹியை எழுதியவர்களில் ஒருவராக (காதிப் அல்-வஹி) இருந்தார்கள். அண்ணல் நபி ( ﷺ ) அவர்கள் அவருக்காக, 'யா அல்லாஹ்! இவரை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக; மேலும் இவரின் மூலம் பிறருக்கும் நேர்வழி காட்டுவாயாக' என்று பிரார்த்தித்தார்கள். எனவே, அவரை நேசிப்பது நபி ( ﷺ) அவர்களை நேசிப்பதன் ஒரு பகுதியாகும்; அவருடைய தூய எண்ணங்களை விமர்சிப்பது ஆன்மீக நோயின் அறிகுறியாகும்."
3. இமாம் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு : கி.பி. 1287)

இமாம் அபுல் ஹசன் அல்-ஷாதிலியின் நேரடி வாரிசான இவர்கள் , தனக்கெனப் புத்தகங்கள் எதையும் எழுதவில்லை. இவருடைய போதனைகள் வாய்மொழியாகப் பரவி, இவருடைய மாணவரான இப்னு அதா - அல்லாஹ்வின் லதாயிஃப் அல்-மினன் (நுட்பமான அருட்கொடைகள்) என்ற நூலின் மூலம் பதிவு செய்யப்பட்டன.

 அவரிடமிருந்து வந்த கருத்து:
'லதாயிஃப் அல்-மினன்' நூலில், அல்-முர்ஸி அவர்கள் பிரபஞ்சத்தின் ஆன்மீகப் படிநிலைகளை விவரிக்கும்போது, உள்நாட்டுப் போர்கள் (ஃபித்னா) எதுவாக இருந்தாலும், ஸஹாபாக்களின் நிலையை அதற்குப் பின் வந்த அனைத்து  இறைநேசர்களை விடவும் மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறார்:
"அல்லாஹ்வின் தூதருடன் ( ﷺ) இணைந்து பயணித்த ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه  அவர்களின் குதிரையின் நாசியில் நுழைந்த தூசியானது, உமர் இப்னு அப்துல் அஜீஸ் போன்ற ஆயிரம் மனிதர்களை விடச் சிறந்தது."

*குறிப்பு: அமீருல் முஃமினீன் பில் ஹதீத் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் ஷெய்கனா  மஃரூஃப் அல்-கர்கி رَحِمَهُ ٱللَّٰهُ  போன்ற ஆரம்பகால அறிஞர்களுக்குரிய இந்தக் கூற்றை, அல்-முர்ஸி மற்றும் ஆரம்பகால ஷாதிலி அறிஞர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டினர். ஃபித்னாவின் போது ஏற்பட்ட அரசியல் பிழைகள் எத்தகையதாக இருந்தாலும், 'ஸுஹ்பத்' (நபித்தோழமை) என்ற ஆன்மீக அந்தஸ்தை எதுவும் மிஞ்ச முடியாது என்பதை விளக்கவே இக்கூற்று பயன்படுத்தப்பட்டது).


Wednesday, 10 June 2026

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் பின் அப்ஃபான் ‎

🌹அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه 🌹

பெருமானார்  ﷺ அவர்களது இரு புதல்வியரை மணமுடித்தவர்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்ற அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது ஷஹாதத்,

ஜுபைர் இப்னு பக்கர் அவர்கள் நவின்றார்கள் , " ஸெய்யிதினா உஸ்மான் பின் அப்ஃபான் رضي الله عنه அவர்கள் ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு, துல்ஹஜ் பிறை 18 அன்று லுஹர் தொழுகைக்குப் பின்னர் ஜும்மாவுடைய நாளில் ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்கள் 82 வயதை எட்டி இருந்தார்கள்.அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.

ஆதார நூல் 📕 இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ, மஜ்ம உஸ்ஸவாயித்,பக்கம் 192

Thursday, 4 June 2026

கதீர் கும் ஹதீதின் விளக்கம்

கதீர் கும் ஹதீதில் உள்ள மவ்லா என்னும் சொல்லின் விளக்கம் ,

முஹக்கிக் இமாம் ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது லம்ஆத் அல் தன்கீஹ் ( மிஷ்காத் ஷரீபின் ஷரஹ் ) ல் எழுதுகின்றார்கள் , ஹதீதில் வரும் ' மவ்லா' என்ற சொல்லின் பொருள் உதவியாளர் அல்லது நேசர் என்பதாகும் .

ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மேலும்  ,ஸுரா மாய்தாவின் 55 ஆயத்தின் மவ்லா அலீ  كرم الله وجهه அவர்கள் குறித்து இறங்கியது என்றும் கூறுகின்றார்கள்.

சிராஜுல் ஹிந்து ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸூபி காதிரி قدس الله سره العزيز   அவர்கள் ஹதீதில் வந்துள்ள மௌலா என்றால் நேசர் என்று தமது தப்ஸீர் அஜீஜியாவில்  என்று விவரிக்கின்றார்கள்.
சைபே சிஷ்தியா நூலின் மூலம் காதியானிகளை விரட்டி அடித்த கண்மணி நாயகத்தின் திருப்பேரர் ஸெய்யது பீர் மெஹர் அலீ ஷாஹ் சிஷ்தீ கோல்ராவீ قدس الله سره العزيز தமது தப்ஸீர் மா பயன
 ஸுன்னி வஷியா வில் மவ்லா என்றால் நேசர் அல்லது உதவியாளர் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். நிச்சயமாக தலைவர் அல்லது ஸர்தார் அல்ல
இமாமே அஹ்லே ஸுன்னத் அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் காதிரி قدس الله سره العزيز ,அவர்கள் முஹத்திஸ் இமாம் பத்ருத்தீன் அய்னீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை மேற்கோள் காட்டி மவ்லா என்றால் உதவியாளர் என்று பொருள் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னும் இந்தாளை " ஈதே  கதீர் " என்றழைக்கும் வழக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்களான ஷியா ராபிழியாக்களது வழிமுறையாகும்.

இமாம் முஹம்மது பின் யஹ்யா மாலிக் ( மறைவு ஹிஜ்ரி 741) அவர்கள் எழுதுகின்றனர்,

 " ஷியாக்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது ஷஹாதத் நாளை ஈத் நாளாக கடைபிடித்து அதற்கு " ஈதே  கதீர் " என்றழைத்தனர்.

ஈதே  கதீர் என்று கொண்டாடும் பழக்கம் ஸஹாபிகளை தூற்றும் ஷியாக்களது வழிமுறை .பித்அத் வாதிகளது வழிமுறைக்கு மாற்றமாக நடப்பது தான் சத்திய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாத்தின் வழிமுறை.

ஆதார நூல் 📕 தம்ஹீத் அல் பயான் 
பீ மகாலத் ஷஹீத் அல் உஸ்மான் ,பாகம் 1, பக்கம் 186

Thursday, 21 May 2026

இல்மின் சிறப்பு

🌹  இல்மின்( கல்வியின்)  சிறப்பு 🌹

ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " இல்மாகிறது செல்வத்தை விட சிறந்தது. கல்வி உங்களை பாதுகாக்கின்றது ,மாறாக நீங்கள்தான் செல்வத்தை பாதுகாக்கின்றீர்கள். இல்மாகிறது செயல்படுத்துவதன் மூலம் அதிகரிக்கின்றது, ஆனால் செல்வமோ செலவு செய்தால் குறையும் " 

ஆதார நூல் 📕 கன்ஸுல் உம்மால்,பாகம் 10,பக்கம் 263

Monday, 11 May 2026

ஜியாரத்

🌹     ஜியாரத்    🌹

பூமான் நபி  ﷺ அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹதுப் போரில் ஷஹீதான ஷுஹதாக்களின் கப்ரை ஜியாரத் செய்வார்கள். கண்மணி நாயகம்  ﷺ அவர்களது வழிமுறையைப் பின்பற்றி குலபாயே ராஷிதீன்களான ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்திக் رضي الله عنه,பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه,ஜாமியுல் குர்ஆன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه ஆகியோரும் ஒவ்வொரு வருடமும் உஹது ஷுஹதாக்களை ஜியாரத் செய்வார்.

ஆதார நூல் 📕 முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ,பாகம் 3,பக்கம் 573-574,ஹதீஸ் எண் # 6716

Thursday, 23 April 2026

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

ஸெய்யிதினா ஹழ்ரத் தானியால் عَلَيْهِ ٱلسَّلَامُ தமது கப்ரில் தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

முஹத்தீஸ் இமாம் கபீர் இப்னு அபீ துன்யா رَحِمَهُ ٱللَّٰهُ (இமாம் புகாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் மாணவர், அவருடைய மாணவர் இமாம் இப்னு மாஜா رَحِمَهُ ٱللَّٰهُ ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  

ஹஸ்ரத் இப்ராஹீம் பின் அப்துர் ரஹ்மான் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களிடமிருந்து ரிவாயத் செய்கிறார்கள்: ஒரு முறை ஸெய்யிதினா  யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள், ஸெய்யிதினா  தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் கப்ருக்கு அருகில் சென்றபோது, கப்ரிலிருந்து ஒரு சப்தம் கேட்டது. ஹழ்ரத் தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ  கப்ரின் உள்ளே அல்லாஹ்வின் தஸ்பீஹ் மற்றும் தக்தீஸில் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்:  

**سبحان من تعزز بالعزة وقهر العباد بالموت.**  

ஹழ்ரத் யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ இந்த தஸ்பீஹ் வார்த்தைகளைக் கேட்டு முன்னேறிச் சென்றார்கள். அப்போது அசரீரி ஒலித்தது:  

**انا الذي تعززت بالعزة وقهرت العباد بالموت من قالهن استغفرت له نسماوات والأرض ومن فيهن.**  

ஆதார நூல் 📕  இமாம் இப்னு அபீ துன்யா, எண் 546;  ஹயாதுல் ஹயவான்,10/1

அஹ்லேபைத்துகள் மற்றும் ஷெய்கைன்களது நேசம்

🌹  அஹ்லேபைத்துகள் மற்றும்  ஷெய்கைன்களது நேசம்  🌹

ஸித்தீகுல்  அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه மற்றும் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் குறித்து  இமாம் அபூ ஹனீஃபா رضي الله عنه, பூமான் நபி  ﷺ அவர்களது திருப்பேரர் இமாம் ஸெய்யது முஹம்மது பாகிர் رضي الله عنه   அவர்களுடனான உரையாடல்:

இமாம் அபூ ஹனீஃபா رَحِمَهُ ٱللَّٰهُ  கூறினார்கள்: நான் அபூ ஜாஃபர் முஹம்மது இப்னு அலீ (இமாம் பாகிர்) அவர்களைச் சந்தித்தேன். நான் கேட்டேன்: “ஸெய்யிதினா அபூபக்கர் மற்றும் ஸெய்யிதினா உமர் அவர்களைப் பற்றி தங்களது கூற்று யாது  ?” 

அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்  سبحانه و تعالى ஸெய்யிதினா அபூபக்கர் மற்றும் ஸெய்யிதினா  உமர் அவர்களுக்கு ரஹ்மத் புரிவானாக !”

நான் கூறினேன்: “எங்கள் ஈராக் நகரில் (சிலரால்) உங்களைப் பற்றி கூறப்படுகிறது — நீங்கள் அவர்களிடமிருந்து தூரமாகி விடுகிறீர்கள் என்று.”

இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்கள் வியப்புடன்  கூறினார்கள்: “அல்லாஹ் தடுக்கட்டும்! என்னைப் பற்றி இதைச் சொன்னவன் பொய் சொன்னான். அல்லது உங்களுக்குத் தெரியாதா?

 அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப்  كرم الله وجهه  அவர்கள் தங்கள் மகள் ஸெய்யிதா உம்மு குல்ஸூம் رضی الله عنها  அவர்களை , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப் رضي الله عنه  அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். 

அந்தப் பெண்ணின் (உம்மு குல்ஸூம்) பாட்டனார் அல்லாஹ்வின் ஹபீப்  ரஸூலுல்லாஹ்  ﷺ  அவர்களும், பாட்டியார் ஸெய்யிதா உம்முல் முஃமினீன் அன்னை  கதீஜா رضی الله عنها அவர்களுமாவார்கள்.”

[ஆதார நூல் 📕 அல்-முன்தஸம் ஃபீ தாரீகில் உமம் வல் முலூக், பாகம்  7, பக்கம் 161

குறிப்பு:
இமாம் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் தங்கள் இந்த வரலாற்று நூலில் பொதுவாக ஆதாரங்களை (ஸனத் உடன்) கூறும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். மேலே உள்ள ரிவாயத் (செய்தி) அவர்கள் இமாம் அபூ ஹனீஃபா அவர்களிடமிருந்து நேரடியாக, உறுதியாகக் கூறியுள்ளார்கள். இதிலிருந்து, இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் இந்தச் செய்தியை இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் சொந்த நூலிலிருந்து படித்து எடுத்திருக்கலாம் என்பது அதிக சாத்தியமாகத் தெரிகிறது. இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் தாங்கள் இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் பல நூல்களை ஜாமிஉ நிஸாமிய்யா நூலகத்திலிருந்து பெற்றிருப்பதாகக் கூறியுள்ளார்கள்.

அதாவது, இமாம் ஸெய்யது முஹம்மது  பாகிர் رضي الله عنه அவர்கள் முதலாவதாக, ஈராக்கில் ராஃபிழிகள் (ராஃபிழி/ஷியாக்கள் ) தங்கள் பெயரால் பரப்பிய பொய்யைத் தெளிவாக மறுத்தார்கள்.

 இரண்டாவதாக, ஒரு  அறிவு சார்ந்த ஆதாரத்தையும் முன்வைத்தார்கள்:

உறவுமுறையில்  ஹழ்ரத்  உமர் கத்தாப்  رضي الله عنه அவர்கள் ஹழ்ரத் அலீ மற்றும் ஹழ்ரத் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் மருமகன் ஆவார்கள்.

 அவர்களின் மனைவியின் (உம்மு குல்ஸூம்) பாட்டனார் ரஸூலுல்லாஹ்  ﷺ அவர்களும், பாட்டியார் அன்னை கதீஜா رضی الله عنها அவர்களுமாவார்கள். இப்படிப்பட்ட திருமண உறவாகிய ஹழ்ரத் உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களைப் பற்றி “மஆதல்லாஹ்” (அல்லாஹ் தடுக்கட்டும்) தான் எப்படி ராபிழியாக்கள் பொய்யாக கூறுவது போல் தூரமாக்க முடியும்.
 

இதிலிருந்து இன்னொரு முக்கியமான செய்தியும் தெரிகிறது: இமாம் பாகிர் அவர்கள் ஸெய்யிதா உம்மு குல்ஸூம் رضی الله عنها அவர்களை ஹழ்ரத் உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களின் மனைவியாக இருந்ததால், ஹழ்ரத் உமர் அவர்களைத் தூரமாக்குவது     அசாத்தியம் என்று கருதினார்கள்.

அப்படியிருக்க, ராஃபிளிகள் /ஷியாக்கள்  சிறிதும் அறிவற்ற முறையில்  உம்முல் முஃமினீன் அன்னை ஸெய்யிதா  ஆயிஷா رضی الله عنها  அவர்களைப் பற்றி குறை கூறுகிறார்கள்.  அன்னை அவர்கள்  ரஸூலுல்லாஹ்  ﷺ  அவர்களின் மிகவும் பிரியமான மனைவியாக இருந்தார்கள்  என்பதை அறிந்தும்
கூட இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுகின்றார்கள்.

Tuesday, 17 February 2026

தராவீஹ் தொழுகை

🌹  தராவீஹ் தொழுகை 🌹

أخبرنا أبو طاهر الفقية، قال: أخبرنا أبو عثمان البصري، قال: حدثنا أبو أحمد: محمد بن عبد الوهاب، قال: أخبرنا خالد بن مخلد، قال: حدثنا محمد بن جعفر، قال: حدثني يزيد بن خصيفة، عن السائب بن يزيد، قال: كنا نقوم في زمان عمر بن الخطاب بعشرين ركعة والوتر

ஹழ்ரத் ஸயீப் இப்னு யஸீத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " பாரூக்குல் அஃலம் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாபத்தின் போது மக்கள் இருபது ரக்அத் தராவீஹ் தொழுகையுடன் ,வித்ர் தொழுகையையும் தொழுதார்கள் " .

ஆதார நூல் 📕 மஃரிபத் அல் ஸுனன் வல் அதர் ,இமாம் பைஹகீ رضي الله عنه ,பாகம் 4,பக்கம் 42,ஹதீஸ் எண் : 5409


பூமான் நபி  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " எனது ஸுன்னத்தை உறுதியாக பற்றிப்பிடியுங்கள; இன்னும் குலஃபாயே ராஷிதீன்களது ஸுன்னத்தையும் பற்றிப்பிடியுங்கள்" 

📕 ஸுனன் அபூ தாவூத்,பாகம் 2,பக்கம் 635 ; ஸுனன் திர்மிதி ,பாகம் 2,பக்கம் 108; ஸுனன் தாரிமி,பாகம் 1,பக்கம் 43; ஸுனன் இப்னு மாஜா 

Tuesday, 10 February 2026

அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாத்

🌹 அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் 🌹

இமாமுல் தாஈபீன் ஸெய்யிதினா  க்வாஜா ஹசன் பஸரி  رحمہ اللہ அவர்கள் கூறினார்கள்:

"يا أهل السنة ترفقوا رحمكم الله فإنكم من أقل الناس"

"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரே ! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும், மென்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இந்தக் காலத்தில் நீங்கள் மக்களில் மிகக் குறைவானவர்களாக இருக்கிறீர்கள்."

 [ ஆதார நூல் 📕 ஷரஹ் உஸுல் அகாயித் அஹ்லுஸ் ஸுன்னத் ,  பாகம்  1, பக்கம் 31, எண்: 19 ]

Sunday, 25 January 2026

ஷஃபான் - ஷபே பராஅத்

🌹 புண்ணியமிகு ஷஃபான் 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உசாமா பின் ஸைத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:  

நான் அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ அவர்களிடம் நவின்றேன் , 

" யா ரசூலல்லாஹ் ﷺ ! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதைப் போல, வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் பார்ப்பதில்லை.  

அதற்கு அண்ணல் நபி ﷺ கூறினார்கள்: "ரஜப் மற்றும் ரமழான் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு மாதம் உள்ளது. மக்கள் அதைப் பற்றி கவனமற்றவர்களாக இருக்கின்றார்கள்.  அந்த மாதத்தில் மக்களின் அமல்கள்  அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் உயர்த்தப்படுகின்றன. எனவே, எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்படுவது எனக்கு மிகவும் பிடித்தமானது."  

ஆதார நூல் 📕 ஸுனன் நஸாஈ, பக்கம் 267, கிதாபுஸ் ஸவ்ம், பாப் 70: நபியவர்களின் நோன்பு நோற்பது பற்றிய விளக்கம், ஹதீஸ் எண்: 2358  

ஆதாரமாக சமர்பித்துள்ள ஹதீஸ் நூலின் தஹ்கீக் செய்தவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கையுடைய நவீன கால வஹாபிகளின் இமாம் நஸீருத்தீன் அல்பானி .

மேலே உள்ள ஹதீதில் ஷஃபான் மாதம் நமது அமல்கள் அல்லாஹ்  سبحانه و تعالى அளவில் உயர்த்தப்படுகின்றன என்பது நபிமொழி மூலம் அறிகின்றோம்.

இனி எந்த நாளில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன குறித்தும் ஹதீதுகளில் வந்துள்ளன.

Tuesday, 20 January 2026

மிஃராஜ்

பெருமானார்  ﷺ அவர்களது மிஃராஜ் பயணத்தின் பொழுது ஸெய்யிதுல் அன்பியாவாக  நபிமார்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்தல் .

இமாம் குர்துபி (மறைவு  671 ஹிஜ்ரி) எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்வின் ஹபீப் நபி கரீம் ﷺ அவர்களின் பின்னால் அனைத்து நபிமார்களும்  عليه السلام அவர்களும் ஏழு  வரிசைகளில்  நின்றிருந்தார்கள். 3 வரிசைகள் ரசூல்களுடையது, 4 வரிசைகள் நபிமார்களுடையது.

நபி கரீம் ﷺ அவர்களின் முதுகுக்கு நேராக  ஸெய்யிதினா இப்ராஹீம் நபி عليه السلام அவர்கள் இருந்தார்கள். வலது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்களும், இடது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام அவர்களும் இருந்தார்கள். பின்னர் ஸெய்யிதினா மூஸா عليه السلام அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் மற்ற ரசூல்கள் இருந்தார்கள்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் இரண்டு ரக்அத்  தொழுதார்கள். தொழுகை முடிந்த பிறகு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்: என் ரப் எனக்கு வஹீ அருளினான் – “நபிமார்களிடம்   நான் கேட்க வேண்டும்: உங்களில் யாராவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையாவது இபாதத் செய்யும்படி அழைத்த ரசூல் அனுப்பப்பட்டார்களா?” என்று.

அப்போது இறைத்தூதர்கள்  கூறினார்கள்: யா ரசூலல்லாஹ் ﷺ! நாங்கள் சாட்சியம் கூறுகிறோம் – நாங்கள் அனைவரும் ஒரே தாவத்துடன் (அழைப்புடன்) அனுப்பப்பட்டோம். அது لا إله إلا الله (லா இலாஹ இல்லல்லாஹ்) ஆகும்.

அல்லாஹ் ﷻ இன் தாத்தை தவிர வேறு யாரையும் இபாதத் செய்வது அனைத்தும் பொய்யானது. நீங்கள் ﷺ காத்தமுல்-நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை) ஆவீர்கள், ஸெய்யிதுல்-முர்சலீன் (ரசூல்களின் தலைவர்) ஆவீர்கள். நீங்கள் ﷺ எங்களுக்கு இமாமத் செய்தீர்கள் – இதன் மூலம் எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது, உங்களுக்குப்  பிறகு கியாமத் வரை வேறு எந்த நபியும் இல்லை.

மேலும் ஸெய்யிதினா ஈஸா عليه السلام அவர்களுக்கு உத்தரவு செய்யப்பட்டது: அவர்கள் உலகிற்கு மீண்டும் வரும் பொழுது  , நபி கரீம் ﷺ அவர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

முடிவுரை 
இதிலிருந்து தெரிய வருகிறது: அனைத்து நபிமார்களும், ரசூல்களும்  ஜீவனுடன் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் உள்ள மஸ்ஜிதுல்-அக்ஸாவில் அனைத்து நபிமார்களும் மிஃராஜ் தினத்தன்று  ஒன்று கூடினார்கள், அனைவரும் பேசினார்கள், அல்லாஹ்வின் ஹபீப் ﷺ அவர்களின் பின்னால்  தொழுதார்கள்.

ஆதார  நூல்  📕 அல்-ஜாமி லி அஹ்காமில் குர்ஆன் லில் குர்துபி,  பாகம்  19, பக்கம் 70


Sunday, 11 January 2026

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதியுள்ளார்கள்:  

وَالْأَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلَامُ بَعْدَمَا قُبِضُوا رُدَّتْ إِلَيْهِمْ أَرْوَاحُهُمْ فَهُمْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ كَالشُّهَدَاءِ  

"நபிமார்கள் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களின் ரூஹ் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படுகின்றன. ஆகவே அவர்கள் தங்கள் இறைவனிடம் ஷுஹதாக்களைப் போல உயிரோடு இருக்கின்றனர்."  
(ஆதார நூல் 📕 அல்-இஃதிகாத் லில்-பைஹகீ, பக்கம் 415)  

 இங்கு இமாம் பைஹகீ தெளிவுபடுத்துவது என்னவென்றால், நபிமார்களின் உயிரோடு இருப்பதை சாதாரண மக்கள் பர்ஸக் வாழ்வில் இருப்பது போல புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அவர்களின் ரூஹ் அவர்களின் உடலுக்கு  திருப்பி அளிக்கப்படுகிறது.   

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்  ஷாஹ் அப்துல் ஹக் முஹதீஸ் தெஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாமாகக் கருதப்படுபவர்கள், இவ்வாறு எழுதியுள்ளார்கள்:  

"நிச்சயமாக நபிமார்கள் உயிரோடு இருக்கின்றனர். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்களின் வாழ்வு உலக வாழ்வைப் போன்ற உடல் சார்ந்த (ஜிஸ்மானி) வாழ்வாகும்; ஷுஹதாக்களைப் போன்ற  ரூஹானி வாழ்வு அல்ல."  

[ஆதார நூல் 📕  அஷ்இஆத்துல்-லம்ஆத் – தொகுதி 1, பக்கம் 574]  

இந்த விளக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நம்பிக்கையை தெளிவாக விளக்குகிறது.

Thursday, 8 January 2026

இக்லாஸ் இல்லாதவர்


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

“ ஸெய்யிதினா இப்ராஹீம் பின் அத்ஹம் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் கூறினார்கள்:  

‘யார் புகழை விரும்புகிறாரோ, அவர் அல்லாஹ்விடம் உண்மையான நேர்மையுடன் (இக்லாஸ் கொண்டு) இருக்கவில்லை.’”  

[ ஆதார நூல் 📕 தஃப்தீல் அல்-ஃபக்ர் - அல்-காதி அபீ யஃலா தொகுப்பிலிருந்து]

Monday, 5 January 2026

துஆ கேட்பதன் அதபு

🌹 துஆ கேட்பதன் அதபு 🌹

இமாம் அபுல் கைர்  ஷம்ஷுத்தீன் அல் ஜசரீ அஷ்ஷாபிஈ அஷ்அரீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் (மறைவு 833 ஹிஜ்ரி) தமது உலகப் புகழ்பெற்ற 'ஹிஸ்னுல் ஹஸீன்' நூலில் எழுதுகின்றார்கள் ,

துஆக்களின் அதபு குறித்த பாடத்தில் எழுதுகின்றார்கள் ,

وأن يتوسل إلى الله تعالى بأنبيائه والصالحين من عباده 

ஒவ்வொரு மனிதனும் துஆவில் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களது வஸீலாவாக்கி ( இடைபொருளாக்கி) துஆ கேட்க வேண்டும் .
 

ஆதார நூல் 📕 அல் ஹிஸ்னுல் ஹஸீன் மின் கலாம் ஸெய்யதில் முர்ஸலீன் ,பக்கம் 25 மற்றும் 148
Related Posts Plugin for WordPress, Blogger...