Monday, 8 September 2025

மவ்லிதுந்நபி குறித்து ஹாபிழ் இப்னு கதீர் ‎رَحِمَهُ ٱللَّٰهُ‏


மவ்லிதுந்நபியின் இன்றைய கொண்டாட்ட நடைமுறை பாத்திமி ஷியாக்களுடையது என்றும், பைத்துல் முகத்தஸை வென்றெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மைத்துனர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் குறித்தும் வஹாபிகள் மோசடியான திரிக்கப்பட்ட கருத்துகளை - அம்மன்னர் பாஸிக்காகவும்(பாவி),கொடுங்கோலன் என்றும்,பித்அத்தி என்றும் வாய் கூசாமல் அல்லாஹ்,ரஸுலுக்கு அஞ்சாமல் பொய் பரப்புகின்றனர்.

வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும் இமாம் ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,மன்னர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் பற்றி பின்வருமாறு தமது நூலில் எழுதுகின்றனர், 


أحد الاجواد والسادات الكبراء والملوك الامجاد له آثار حسنة وقد عمر الجامع المظفري بسفح قاسيون وكان قدهم بسياقه الماء إليه من ماء بذيرة فمنعه المعظم من ذلك واعتل بأنه قد يمر على مقابر المسلمين بالسفوح وكان يعمل المولد الشريف في ربيع الاول ويحتفل به احتفالا هائلا وكان مع ذلك شهما شجاعا فاتكا بطلا عاقلا عالما عادلا رحمه الله وأكرم مثواه وقد صنف الشيخ أبو الخطاب ابن دحية له مجلدا في المولد النبوي سماه التنوير في مولد البشير النذير فأجازه على ذلك بألف دينار وقد طالت مدته في الملك في زمان الدولة الصلاحية وقد كان محاصر عكا وإلى هذه السنة محمودالسيرة والسريرة قال السبط حكى بعض من حضر سماط المظفر في بعض الموالد كان يمد في ذلك السماط خمسة آلاف راس مشوى وعشرة آلاف دجاجة ومائة ألف زبدية وثلاثين ألف صحن حلوى


அவர் அளவற்ற ஈகைபுரிபவர், வல்லமைமிக்க எஜமானர், மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்; அவரது செயல்கள் மிகவும் சிறப்பானவை. அவர் காசியூன் அருகில் ஜமியா அல் முழஃபரி என்னும் அரபுக் கல்லூரியைக்  கட்டினார். ரபிஉல் அவ்வல் மாதத்தில் அவர் மவ்லித் அஷ் ஷரீஃபை (يعمل المولد الشريف في ربيع الاول) பெரிய கொண்டாட்டத்துடன் நடத்துவது வழக்கம். மேலும், அவர் அன்புள்ளவர், தைரியமானவர், ஞானமுள்ளவர், அறிஞர், மற்றும் நீதியுள்ள நபர் . அன்று வாழ்ந்து வந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞரான ஷெய்கு அபுல் கத்தாப் (رَحِمَهُ ٱللَّٰهُ )  மன்னரின் வேண்டுகோளை ஏற்று  மவ்லித் அந் நப்வி பற்றிய ஒரு நூலை எழுதினார், அதன் பெயர் “அல்-தன்விர் ஃபி மவ்லித் அல் பாஷிர் அல் நஸீர்”, அதற்காக மலிக்குல் முஸப்பர் அவருக்கு 1000 தினார்கள் வழங்கினார். அவரது ஆட்சி சலாஹியா ஆட்சி வரை நீடித்தது, அவர் அகா நகரை  கைப்பற்றினார், மற்றும் அவர் மரியாதைக்குரிய நபராக இருந்தார்.

அல்-சப்த் என்பார் கூறுகிறார், முஸப்ஃபர் நடத்திய மவ்லித் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் அங்கு மன்னரின் விருந்தோம்பலை விவரிக்கையில் : மன்னர் மலிக்குல் முஸப்பர்  5000 நன்கு வேகவைக்கப்பட்ட ஆடுகளை, 10,000 கோழிகளை, 100,000 பால்கிண்ணங்களை (பால்) மற்றும் 30,000 மிட்டாய் தட்டுகளை (இனிப்புகள்) மேசையில் நிரப்புவது வழக்கம் என்று கூறினார்.

[ நூல் : தாரீக் இப்னு கதீர், அல் பிதாயா வந்நிஹாயா,பாகம் 13,பக்கம் 174 ] 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...