Saturday, 11 July 2026

பூமான் நபி  ‎ﷺ ‏அவர்களிடம் ‎உதவி ‎கோருவது

🌹 முஹத்திஸீன்கள் முன்னிலையில், ஒரு மனிதர் ரவ்ழா ஷரீப்  அருகில் சென்று: "எங்கள் முறையீட்டைக் கேட்பவர்களே (உதவியாளர்களே)!" என்று கூறிய சம்பவம் 🌹

இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு 458 ஹி.) அவர்கள் ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்:

> ٤١٧٧ - أخبرنا أبو عبد الله الحافظ أخبرني أبو محمد بن زياد نا محمد بن إسحاق الثقفي قال : سمعت أبا إسحاق القرشي يقول : كان عندنا رجل بالمدينة إذا رأى منكراً لا يمكنه أن يغيره أتى القبر فقال : أيا قبر النبي وصاحبيه ألا يا غوثنا لو تعلمونا .

எங்களுக்கு இமாம் ஹாக்கீம் நிஷாபூரி  (458 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு அபூ முஹம்மத் பின் ஸியாத் (324 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு முஹம்மத் பின் இஸ்ஹாக் அல்-ஸகஃபீ (313 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர் கூறினார்:

"நான் அபூ இஸ்ஹாக் அல்-குரைஷீ (300 ஹி.) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்:

'எங்களிடம் மதீனாவில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தம்மால் தடுக்க முடியாத ஒரு தீமையை  கண்டால், நபியவர்களின் கப்ர் (அதாவது ரௌழா முபாரக் ﷺ) அருகில் வந்து இவ்வாறு கூறுவார்:

 'அல்லாஹ்வின் நபி ﷺ அவர்களின் கப்ரே! மேலும், அவர்களின் இரு தோழர்களான (ஸெய்யிதினா அபூபக்ர், ஸெய்யிதினா உமர் رضي الله عنهما) அவர்களின் கப்ர்களே! எங்களின் முறையீட்டைக் கேட்டு உதவுபவர்களே! நீங்கள் எங்களை அறிந்திருந்தால் (எங்களுக்கு உதவியிருப்பீர்கள்).'"

ஆதாரம் 📕 : ஷுஅபுல் ஈமான், பக்கம் 495, ஹதீஸ் எண் 4177.

---

இந்த நிகழ்வை அறிவித்த பிறகு, அந்த மனிதர் மீது எந்த அறிவிப்பாளரும் (ராவியும்) ஷிர்க் என்று தீர்ப்பு வழங்கவில்லை. மேலும், இதை பதிவு செய்த இமாம் அபூபக்ர் அஹ்மத் இப்னு ஹுசைன் அல்-பைஹகீ رحمه الله அவர்களும் அவரை ஷிர்க் செய்தவர் என்று கூறவில்லை.

ஆகையால், "ஷிர்க்" என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை இன்றைய தங்களை "ஸலபி /அஹ்லுல் ஹதீஸ்/ முஜாஹித் " என்று அழைப்பவர்களான வஹாபிகள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது; அவர்களுக்கு முன் வாழ்ந்த இமாம்களுக்கு அத்தகைய விளக்கம் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...