🌹 வலிமார்களின் கராமத்துகள் 🌹
எவ்வாறு நாத்திகர்கள் (முல்ஹித்கள்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முஃஜிஸாக்களை (இறைத்தூதருக்குரிய அற்புதங்களை) மறுக்கின்றார்களோ, அதுபோலவே நவீன கால ஸலபி, வஹாபி, அஹ்லே ஹதீஸ், என விமர்சிக்கப்படுபவர்கள்,இறைநேசர்களது கராமத்துகளை , குறிப்பாக வலிகள் கோமான் கௌஸுல் அஃழம் ஹழ்ரத் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் கராமத்துகளையும் மறுக்கின்றனர்.
வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும் இமாம் தஹபி رحمه الله அவர்கள் எழுதுகின்றார்கள்:
"நான் கூறுகின்றேன்: மாபெரும் மஷாயிக்களில் (இறைநேசர்களில்) கூட, ஹழ்ரத் இமாம் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி, 'கௌஸுல் அஃழம்' رضي الله عنه அவர்களை விட அதிகமான கராமத்துகள் பெற்றவர் யாரும் இல்லை."
ஆதாரம்: 📗 இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ , ஸியர் அஃலா மிந்நுபலா ,பாகம் 15, பக்கம் 185
No comments:
Post a Comment