🌹 ஸஹாபாக்கள் செய்திடாத நல்லமல் பித்அத்தா ?🌹
இமாம் அபூ ஹாமித் அல்-கஸாலி (رَحِمَهُ ٱللَّٰهُ) (வஃபாத்: ஹிஜ்ரி 505) அவர்கள் எழுதுகின்றார்கள்:
"ஒரு செயலை, 'ஸஹாபாக்கள் அதைச் செய்யவில்லை; ஆகவே அது பித்அத்' என்று கூறுவது சரியல்ல என்பதை அறிந்துகொள். ஏனெனில், ஒவ்வொரு அனுமதிக்கப்பட்ட (ஜாயிஸ்) செயலும் ஸஹாபாக்களிடமிருந்து நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
உண்மையான தீய பித்அத் என்பது சுன்னத்தை அழிக்கும் அல்லது அதற்கு முரணாக இருக்கும் செயலாகும்.
எனவே, நன்மை (ஸவாப்) தரக்கூடிய, முஸ்தஹப் அல்லது ஜாயிஸ் ஆன, மேலும் எந்த சுன்னத்திற்கும் முரணாக இல்லாத செயல்களை 'பித்அத்' என்று கூறி தடை செய்வது அறியாமையைத் தவிர வேறொன்றுமல்ல."
ஆதார நூல் 📕 : ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رَحِمَهُ ٱللَّٰهُ, இஹ்யாஉ உலூமித்தீன், தொகுதி 2, பக்கம் 374.
"ஸஹாபாக்கள் இதைச் செய்தார்களா? ஸஹாபாக்கள் அதைச் செய்தார்களா? இந்த அமல் ஸஹாபாக்களிடமிருந்து நிரூபிக்கப்படவில்லை" என்று நவீன கால வஹாபிகள்,ஸலபிகள்,அஹ்லே ஹதீஸ்,தேவ்பந்தியாக்கள்,ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தவர்களது கூற்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கருத்து அல்ல.
No comments:
Post a Comment