Thursday, 16 July 2026

மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதுவது

தமிழாக்கம்✒️ முனாஸிரே அஹ்லே ஸுன்னத் மவ்லானா ஜவ்வாது ஹுசைன் ரப்பானி ,சென்னை 

அஃலா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் முதன்மை மாணவரும் கலீஃபாவுமாகிய ஸத்ருஷ்ஷரீஆ முப்தி அம்ஜத் அலி ஆஸ்மி رَحِمَهُ ٱللَّٰهُ தன்னுடைய பிரபல்யமான நூலான பஹாரே ஷரீஅத்தில் இவ்வாறு எழுதுகிறார்கள்; 

"அடக்கம் முடிந்த பின் மய்யித்திற்கு தல்கீன் (تلقين) செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் கருத்துப்படி மஷ்ரூ' (சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது) ஆகும்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

«إِذَا مَاتَ أَحَدُ إِخْوَانِكُمْ فَسَوَّيْتُمْ عَلَيْهِ التُّرَابَ، فَلْيَقُمْ أَحَدُكُمْ عَلَى رَأْسِ قَبْرِهِ، ثُمَّ لْيَقُلْ: يَا فُلَانَ ابْنَ فُلَانَةَ...»

"உங்களில் ஒருவரின் முஸ்லிம் சகோதரர் இறந்து, அவரை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்திய பின், ஒருவர் அவரது கப்ரின் தலைமாட்டில் நின்று:
'யா ஃபுலான் இப்ன ஃபுலானா' (மய்யித்தின் பெயரையும், அவரது தாயின் பெயரையும் கூறி) என்று அழைக்க வேண்டும்."

பின்னர் கூற வேண்டும்:
«اذْكُرْ مَا خَرَجْتَ عَلَيْهِ مِنَ الدُّنْيَا: شَهَادَةَ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّكَ رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَبِالْقُرْآنِ إِمَامًا.»

"நீ இவ்வுலகைவிட்டு சென்றபோது இருந்த ஈமானை நினைவுகூரு:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை என்று சாட்சி கூறினாய்.
முஹம்மது ﷺ அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறினாய்.
அல்லாஹ்வை உன் இறைவனாகவும்,
இஸ்லாத்தை உன் மார்க்கமாகவும்,
முஹம்மது ﷺ அவர்களை உன் நபியாகவும்,
குர்ஆனை உன் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டாய்."
பின்னர் முன்கர், நகீர் மலக்குகள்:
"இவருக்கு மக்கள் ஆதாரத்தை (பதிலை) கற்றுக் கொடுத்துவிட்டார்கள்; நாம் இவரிடம் என்ன கேட்பது?" என்று கூறுவார்கள்.
யாராவது, "அவருடைய தாயின் பெயர் தெரியாவிட்டால்?" என்று கேட்டபோது நபிகள் நாயகம் ﷺ அவர்கள்:
«يُنْسَبُ إِلَى حَوَّاءَ»
"ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களின் பெயருடன் இணைத்து அழைக்கட்டும்." என்று கூறினார்கள்.
சில தாபிஈன்களின் தல்கீன்
«يَا فُلَانَ بْنَ فُلَانٍ، قُلْ: لَا إِلٰهَ إِلَّا اللَّهُ» (3 முறை)
பின்னர்:
«قُلْ: رَبِّيَ اللَّهُ، وَدِينِيَ الْإِسْلَامُ، وَنَبِيِّي مُحَمَّدٌ ﷺ»
தமிழ்:
"ஓ! இன்னாரின் மகனே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்."
மூன்று முறை கூறிய பின்:
"என் இறைவன் அல்லாஹ்; என் மார்க்கம் இஸ்லாம்; என் நபி முஹம்மது ﷺ" என்று கூறு.

அஃலா ஹழ்ரத் (இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி رَحِمَهُ ٱللَّٰهُ) அவர்கள் சேர்த்த துஆ, 

«وَاعْلَمْ أَنَّ هٰذَيْنِ الَّذَيْنِ أَتَيَاكَ أَوْ يَأْتِيَانِكَ، إِنَّمَا هُمَا عَبْدَانِ لِلَّهِ، لَا يَضُرَّانِ وَلَا يَنْفَعَانِ إِلَّا بِإِذْنِ اللَّهِ، فَلَا تَخَفْ وَلَا تَحْزَنْ، وَاشْهَدْ أَنَّ رَبَّكَ اللَّهُ، وَدِينُكَ الْإِسْلَامُ، وَنَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ، ثَبَّتَنَا اللَّهُ وَإِيَّاكَ بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ، إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.»

தமிழ்:
"உன்னிடம் வந்திருக்கும் (அல்லது வரவிருக்கும்) இந்த இரு மலக்குகளும் அல்லாஹ்வின் அடியார்கள் என்பதை அறிந்துகொள். அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது. ஆகவே பயப்படாதே; கவலைப்படாதே. உன் இறைவன் அல்லாஹ், உன் மார்க்கம் இஸ்லாம், உன் நபி முஹம்மது ﷺ என்று உறுதியாகச் சாட்சி கூறு. அல்லாஹ் நம்மையும் உன்னையும் இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையின் மீது நிலைநிறுத்துவானாக. நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் அருளாளனும் ஆவான்."

அல்-பினாயா ஷர்ஹுல் ஹிதாயாவில் வந்த தல்கீன்

«يَا عَبْدَ اللَّهِ أَوْ يَا أَمَةَ اللَّهِ، اذْكُرْ مَا خَرَجْتَ عَلَيْهِ مِنَ الدُّنْيَا مِنْ شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّ الْجَنَّةَ حَقٌّ، وَالنَّارَ حَقٌّ، وَالْبَعْثَ حَقٌّ، وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا، وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ، وَأَنَّكَ رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا وَرَسُولًا، وَبِالْقُرْآنِ إِمَامًا، وَبِالْكَعْبَةِ قِبْلَةً، وَبِالْمُؤْمِنِينَ إِخْوَانًا.»

தமிழ்:
"அல்லாஹ்வின் அடியாரே! (அல்லது அல்லாஹ்வின் அடியாரே - பெண்) நீ இவ்வுலகைவிட்டு சென்றபோது இருந்த ஈமானை நினைவுகூரு. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை; முஹம்மது ﷺ அல்லாஹ்வின் தூதர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; உயிர்த்தெழுதல் உண்மை; மறுமை நாள் நிச்சயம் வரும்; அல்லாஹ் கப்ரிலுள்ளவர்களை உயிர்த்தெழுப்புவான்; அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது ﷺ அவர்களை நபி மற்றும் தூதராகவும், குர்ஆனை வழிகாட்டியாகவும், கஅபாவை கிப்லாவாகவும், முஃமின்களை சகோதரர்களாகவும் நீ ஏற்றுக்கொண்டாய் என்பதை நினைவுகூரு."

[ ஆதாரங்கள்] : பஹாரே ஷரீஅத் (பாகம் 1, பக். 850–851), அல்-பினாயா ஷர்ஹுல் ஹிதாயா (பாகம் 3, பக். 208).

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...