Thursday, 23 April 2026

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

ஸெய்யிதினா ஹழ்ரத் தானியால் عَلَيْهِ ٱلسَّلَامُ தமது கப்ரில் தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

முஹத்தீஸ் இமாம் கபீர் இப்னு அபீ துன்யா رَحِمَهُ ٱللَّٰهُ (இமாம் புகாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் மாணவர், அவருடைய மாணவர் இமாம் இப்னு மாஜா رَحِمَهُ ٱللَّٰهُ ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  

ஹஸ்ரத் இப்ராஹீம் பின் அப்துர் ரஹ்மான் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களிடமிருந்து ரிவாயத் செய்கிறார்கள்: ஒரு முறை ஸெய்யிதினா  யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள், ஸெய்யிதினா  தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் கப்ருக்கு அருகில் சென்றபோது, கப்ரிலிருந்து ஒரு சப்தம் கேட்டது. ஹழ்ரத் தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ  கப்ரின் உள்ளே அல்லாஹ்வின் தஸ்பீஹ் மற்றும் தக்தீஸில் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்:  

**سبحان من تعزز بالعزة وقهر العباد بالموت.**  

ஹழ்ரத் யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ இந்த தஸ்பீஹ் வார்த்தைகளைக் கேட்டு முன்னேறிச் சென்றார்கள். அப்போது அசரீரி ஒலித்தது:  

**انا الذي تعززت بالعزة وقهرت العباد بالموت من قالهن استغفرت له نسماوات والأرض ومن فيهن.**  

ஆதார நூல் 📕  இமாம் இப்னு அபீ துன்யா, எண் 546;  ஹயாதுல் ஹயவான்,10/1

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...