Monday, 31 August 2026

மவ்லிதுந்நபி  ‎ﷺ

🌹 மவ்லிதுந் நபி  ﷺ 🌹

இமாம் ஜமாலுத்தீன் அல்-கத்தானீ رحمه الله கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் பிறப்பு ஒரு உன்னதமான, கண்ணியமிக்க, புனிதமான நிகழ்வாகும். அவர்களின் ﷺ வருகை, அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு இரட்சிப்பின் தொடக்கமாகவும், அதற்கான வழியாகவும் அமைந்தது.

 மேலும், அவர்களின் ﷺ பிறப்பில் மகிழ்ச்சியடைவது, அவர்களின் ﷺ மூலம் நேர்வழி பெற்றவர்களுக்கு அருள்வளத்தைத் தருவதாகும்.

இந்தக் கண்ணோட்டத்தில், மீலாதுடைய நாள் ஜும்ஆ நாளைப் போன்றதாகும். ஏனெனில், ஜும்ஆ நாளில் நரக நெருப்பு மூட்டப்படுவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நிகழ்வில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், தாராளமாக செலவிடுவதும், இதற்காக ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்களுக்கு அளிக்கப்படும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வதும் பொருத்தமானதாகும்.”»

📕 ஆதாரம்: ஸுபுலுல் ஹுதா வர் ரஷாத் , பாகம் 1, பக்கம் 364.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...