🌹 இறுதிக் காலத்தின் பித்னா 🌹
حدثنا وكيع ثنا عثمان أبو سلمة الشحام حدثني مسلم ابن أبي بكرة عن أبيه قال: قال رسول الله ﷺ يخرج قوم أحداث أسنان سفهاء أحلام ذليقة ألسنتهم بالقرآن يقرؤونه لا يجاوز تراقيهم فإذا لقيتموهم فأنيموهم ثم إذا لقيتموهم فاقتلوهم فإنه يؤجر قاتلهم
ஹழ்ரத் அபூ பக்ரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"இறுதிக்காலத்தில் ஒரு கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் வயதில் இளமையானவர்களாகவும், கடுமையான இயல்புடையவர்களாகவும், குர்ஆனை நாவன்மையுடன் ஓதுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் ஓதும் குர்ஆன் அவர்களின் தொண்டையைத் தாண்டி (அதாவது, அவர்களின் இதயங்களில் பதிந்து, வாழ்க்கையில் செயலாக) செல்லாது.
நீங்கள் அவர்களைச் சந்தித்தால், முதலில் அவர்களை அடக்கி, அறிவுரை கூறி, உண்மையை எடுத்துரையுங்கள். அதன் பிறகும் அவர்கள் எதிர்த்து வந்தால், அவர்களுடன் போரிடுங்கள். ஏனெனில், அவர்களுடன் போரிட்டு அவர்களை கொல்பவருக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டு."
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ பக்ரா رضي الله عنه
ஹதீஸ் தரம்: இஸ்னாதுஹு ஸஹீஹ் (அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது)
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஹதீஸ் எண்: 20261,பக்கம் : 199
No comments:
Post a Comment