Tuesday, 4 August 2026

முஹத்திஸீன்களது வஸீலா

🌹 இமாம் முல்லா அலீ காரீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கொள்கை 🌹

இமாம் முல்லா அலீ காரீ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள்,

قال شيخ مشايخنا علامة العلماء المتبحرين شمس الدين محمد الجزري في مقدمة شرحه للمصابيح المسمى بتصحيح المصابيح : إني زرت قبره بنيسابور، وقرأت بعض صحيحه على سبيل التيمن والتبرك عند قبره، ورأيت آثار البركة ورجاء الإجابة في تربته .

எனது உஸ்தாதும், ஷெய்குல் மஷாயிஹும், பெரும் அறிஞர்களின் அடையாளமுமான இமாம் ஷம்ஸுத்தீன் முஹம்மது அல்-ஜஸரி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், தமது "தஸ்ஹீலுல் மஸாபீஹ்" என்ற நூலில் கூறுகிறார்கள்:

"நான் நிஷாபூருக்குச் சென்று, இமாம் முஸ்லிம் رضي الله عنه  அவர்களின் கப்ரை ஸியாரத் செய்தேன். அவர்களின் கப்ரின் மூலம் தபர்ருக் (பரக்கத்) பெறுவதற்காக, அவர்களின் கப்ரின் அருகில் தங்கினேன்.

அங்கே நான் 'ஸஹீஹ் முஸ்லிம்' நூலின் ஒரு பகுதியை ஓதினேன். மேலும், அவர்களின் கப்ரின் மூலம் பரக்கத்தை நான் கண்டேன்; அவர்களின் கப்ரின் அருகில் செய்யப்படும் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் நான் அனுபவித்தேன்."

ஆதார நூல் 📕 : மிர்காதுல் மஃபாதீஹ் – ஷர்ஹு மிஷ்காதுல் மஸாபீஹ், இமாம் முல்லா அலீ அல்-காரி رَحِمَهُ ٱللَّٰهُ,  பாகம் 1, பக்கம் 64.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...