🌹 முஹத்திஸீன்களது மவ்லித் 🌹
குத்புல் இர்ஷாத் , இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மகனார் ,
சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திஸ் திஹ்லவி رحمه الله அவர்கள் எழுதுகிறார்கள்:
“ரபீஉல் அவ்வல் மாதத்தில் நாம் காணும் பரக்கத், அதில் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் பிறந்ததன் காரணமாகும்.
உம்மத்தினர் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்தும் ஸலாமும் ஓதுவதோடும், மக்களுக்கு உணவளிப்பதோடும், ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களின் பரக்கத்துகள் அவர்கள் மீது அதிகமாக இறங்குகின்றன.”
இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி رحمه الله அவர்களின் தந்தையான ஹழ்ரத் ஷாஹ் அப்துர் ரஹீம் திஹ்லவி رحمه الله அவர்கள் எழுதுகிறார்கள்:
“அண்ணல் நபி ﷺ அவர்களுடன் எனது தொடர்பை அதிகரித்துக் கொள்வதற்காக, மௌலித் நாட்களில் நான் உணவு தயாரித்து மக்களுக்கு வழங்குவது வழக்கம்.
ஆனால், ஒரு வருடம் உணவு தயாரிப்பதற்கான எந்த வசதியும் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே, என்னிடம் இருந்த சில வறுத்த கொண்டைக்கடலைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. அவற்றை மக்களிடையே பகிர்ந்து கொடுத்தேன்.
அன்று இரவு நான் கனவில் நபி ﷺ அவர்களைக் கண்டேன். நான் மக்களுக்குப் பகிர்ந்த அதே வறுத்த கொண்டைக்கடலைகள் அவர்களின் ﷺ முன்னால் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்டு நபி ﷺ அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதை நான் கண்டேன்.”
ஆதார நூல் 📕 தப்ஸீர் அஜீஸி , சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ
இந்திய முஸ்லிம் சமூகத்தின் மாபெரும் முஹத்திஸீன்கள் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மகனார் மற்றும் தகப்பனார் அவர்களது வழிமுறை மீலாதுந் நபி குறித்து தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துணை ஆதாரங்கள் உள்ள போதும் நா கூசாமல் மீலாதுந் நபி கொண்டாடுவது பரேல்விகளது வழிமுறை என்பவர்கள் பொய்யர்கள் தானே ?
அல்லாஹ்வின் சாபம் பொய்யர்கள் மீது உண்டாகட்டும் !
No comments:
Post a Comment