Monday, 24 August 2026

முஹத்திஸீன்களது மவ்லித்

குத்புல் இர்ஷாத் , இமாமுல் ஹதீத் பில் ஹிந்த், ஸனதுல் முஹத்திஸீன், ஜைனுல் புகஹா , ஸுல்தானுல் அஸ்பியா , இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் நவின்றார்கள் ,

நான் மக்காவில் நடைபெற்ற ஒரு மீலாது (மௌலித்) மஜ்லிஸில் கலந்துகொண்டேன். அங்கு மக்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது தரூத் மற்றும் ஸலாமை ஓதிக்கொண்டிருந்தனர். மேலும், அண்ணலார் ﷺ பிறப்பதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற சம்பவங்களையும், அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்ததாக அறிவிக்கப்படும் சம்பவங்களையும் நினைவுகூர்ந்து கொண்டிருந்தனர்.

அவற்றில் சில சம்பவங்கள்: அன்னை ஆமினா رضي الله عنها அவர்களிடமிருந்து நூர் வெளிப்பட்டது, அவர்கள் அந்த நூரைக் கண்டது, மேலும் அப்துல்லாஹ் رضي الله عنه அவர்களின் நெற்றியில் நூர் இருப்பதைக் கண்டவுடன் ஒரு பெண் அவரைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தது போன்ற சம்பவங்களாகும்.

திடீரென்று, ஒரு குழுவினரைச் சுற்றி நூர் (ஒளி) சூழ்ந்திருப்பதை நான் கண்டேன். இதை நான் என்னுடைய புறக்கண்களால் கண்டேன் என்று நான் கூறவில்லை. அதேபோன்று, அது ஆன்மீகக் காட்சியாக இருந்தது என்றும் நான் கூறவில்லை. இந்த இரண்டில் எது உண்மை என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

எனினும், அந்த அன்வார்களை (ஒளிகளை) நான் ஆழ்ந்து கவனித்தபோது, எனக்கு ஒரு உண்மை வெளிப்பட்டது: இவை இத்தகைய மஜ்லிஸ்களில் கலந்துகொள்ளும் மலக்குகளின் நூர் (ஒளியாகும்).

மேலும், அந்த மலக்குகளின் நூருடன் சேர்ந்து அல்லாஹ்வின் ரஹ்மத் (அருள்) இறங்குவதையும் நான் கண்டேன்.

ஆதார நூல் 📕  ஃபயூழுல் ஹரமைன், பக்கங்கள் 80–81

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...