🌹 ஷுஹதாக்கள் 🌹
புனித குர்ஆன் — ஸூரத்துல் பகரா, வசனம் 154
وَ لَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌؕ-بَلْ اَحْیَآءٌ وَّ لٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ.
“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் அதை உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.”
காழீ ஸனாஉல்லாஹ் பானிபதீ رحمه الله அவர்கள் கூறுகிறார்கள்:
“இதன் பொருள் என்னவென்றால், அல்லாஹ் தஆலா அவர்களின் ஆன்மாக்களுக்கு உடல்களின் வலிமையை வழங்குகிறான். அதன் மூலம் அவர்கள் பூமி, வானங்கள் மற்றும் சுவர்க்கம் ஆகிய இடங்களில் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டத்தின்படி, அவர்கள் தங்களுடைய நேசர்களுக்கு உதவி செய்கிறார்கள்; தங்களுடைய எதிரிகளை அழிக்கிறார்கள். இதன் காரணமாகவே பூமி அவர்களின் உடல்களையோ அல்லது அவர்களின் கஃபன் துணிகளையோ அழித்துவிடுவதில்லை.”
📔 தஃப்ஸீர் அல்-மழ்ஹரீ, பாகம் 1, பக்கம் 169–170,ஸூரத்துல் பகரா — வசனம் 154
No comments:
Post a Comment