Thursday, 6 August 2026

வலிமார்களை நேசம் கொள்வது

🌹 வலிமார்களை நேசம் கொள்வது 🌹

ஹழ்ரத் அபூ ஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

 "அல்லாஹ் عزوجل ஒரு அடியாரை நேசித்தால், வானவர் கோன் ஸெய்யிதினா ஜிப்ரீல் عليه السلام அவர்களை அழைத்து: 'நான் இன்னார் என்னும் என் அடியானை நேசிக்கிறேன்; நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று கூறுவான்.

அதன் பின்னர் ஸெய்யிதினா ஜிப்ரீல் عليه السلام அவரையும் நேசிப்பார்கள். பிறகு வானத்தில் உள்ள மலக்குமார்களிடம்: 'நிச்சயமாக அல்லாஹ் عزوجل இன்னார் என்னும் அடியானை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று அறிவிப்பார்கள்.

அப்போது வானத்தில் உள்ளவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் வாழும் மக்களின் உள்ளங்களில் அவருக்கான ஏற்றுக்கொள்ளுதலும் (மக்பூலிய்யத்தும்), அன்பும் ஏற்படுத்தப்படும்.

அதேபோல் அல்லாஹ் عزوجل ஒரு அடியானை வெறுத்தால், ஜிப்ரீல் عليه السلام அவர்களை அழைத்து: 'நான் இன்னார் என்னும் அடியானை வெறுக்கிறேன்; நீங்களும் அவரை வெறுங்கள்' என்று கூறுவான்.

அதன்பின் ஜிப்ரீல் عليه السلام அவரையும் வெறுப்பார்கள். பின்னர் வானத்தில் உள்ளவர்களிடம்: 'நிச்சயமாக அல்லாஹ் عزوجل இன்னார் என்னும் அடியானை வெறுக்கிறான்; நீங்களும் அவரை வெறுங்கள்' என்று அறிவிப்பார்கள்.

அதன் பின் பூமியில் வாழும் மக்களின் உள்ளங்களில் அவரைப் பற்றிய வெறுப்பு ஏற்படுத்தப்படும்."

ஆதாரம்:
📖 ஸஹீஹ் முஸ்லிம்
📚 கிதாபுல் பிர்ரி வஸ்ஸிலா வல் ஆதாப்
🔢 ஹதீஸ் எண்: 2637

இன்றளவும் இஸ்லாமிய உலகெங்கும் மக்கள் எவ்வாறு அல்லாஹ்விலே ஃபனாவான இறைநேசச் செல்வர்களின் 
ஜியாரத்தில் ஒன்று கூடுகிறார்கள். உங கோ உள்ள வலிமார்களின் மவ்லித் புகழ் மஜ்லிஸ்களில் ஒன்றுகூடி  உள்ளம் உருகி அவர்களது வாழ்வை சிந்திக்கின்றார்கள் என்பதை நவீனகால வஹாபிகள் இந்த ஹதீதின் மூலமாக சிந்திக்கும் தவ்பீகை அல்லாஹ் அருள்வானாக ! 

آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...