Wednesday 16 December 2020

தவஸ்ஸுல் (வஸீலா ) - 3

ஏந்தல் நபி صلى الله عليه وآله وسلم அவர்களின் நேரடி மற்றும் வெளிரங்கமான உத்தரவு  :

ஹதீத் எண் : 3 

حدثنا ‏ ‏أحمد بن منصور بن سيار ‏ ‏حدثنا ‏ ‏عثمان بن عمر ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏عن ‏ ‏أبي جعفر المدني ‏ ‏عن ‏ ‏عمارة بن خزيمة بن ثابت ‏ ‏عن ‏ ‏عثمان بن حنيف
أن رجلا ضرير البصر أتى النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏فقال ادع الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك وهو خير وإن شئت دعوت فقال ‏ ‏ادعه ‏ ‏فأمره أن يتوضأ فيحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك ‏ ‏بمحمد ‏ ‏نبي الرحمة يا ‏ ‏محمد ‏ ‏إني قد توجهت بك إلى ربي في حاجتي هذه ‏ ‏لتقضى اللهم شفعه في


ஹழ்ரத் உத்மான் பின் ஹுனைப்  رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டது , 'கண் பார்வையற்ற ஒரு நபர் நபிகள் நாயகம் صلى الله عليه وآله وسلم  அவர்களிடம் வந்து கூறினார் , "நான் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் ,நாயகமே ! ". அண்ணல் நபி ﷺ அவர்கள் கூறினார்கள், ' நீர் உமது மறுமை வாழ்வுக்கு வேண்டி வெகுமதியை சேமித்தால் ,அது உமக்கு நல்லது ,இல்லை நீர் விரும்பினால் ,நான் துஆ செய்கின்றேன் 'என்றார்கள் . அவர் 'துஆ செய்யுங்கள் 'என்று கூறினார் . நாயகம்  ﷺ அவர்கள் ,அவரை சரியான முறையில் ஒளு செய்திட சொல்லி ,இரண்டு ரக்அத் தொழுது பின்னர் பின்வரும் துஆவை ஓதுமாறு பணித்தார்கள் , "அல்லாஹும்ம இன்னி அஸ் அலூக்க வ அதவஜ்ஜஹு இலைக்க முஹம்மத்தின் நபிய்யிர் ரஹ்மா . யா முஹம்மது இன்னி கத் தவஜ்ஜஹ்த்து பிக இலா ரப்பி பி ஹாஜத்தி ஹாதிஹி லிதுக்தா .அல்லாஹும்ம பஅஷ்ஷாபி ஹு பியா (யா அல்லாஹ் !, நான் உன்னிடம் கேட்கிறேன், கருணை நபி முஹம்மது ﷺ அவர்களின் பரிந்துரையின் காரணமாக நான் என் முகத்தை உன்னை நோக்கி திருப்புகிறேன். முஹம்மது ﷺ அவர்கள் , என்னுடைய இந்த தேவையைப் பற்றி உங்கள் பரிந்துரையின் காரணமாக நான் என் இறைவனிடம் திரும்பினேன். யா அல்லாஹ் !, என்னைப் பற்றிய நபி ﷺ அவர்களின்பரிந்துரையை ஏற்றுக்கொள் . ")     

இமாம் இப்னு மாஜா,ஸுனன் இப்னு மாஜா, இகாமத் அல் ஸலாத் வல் ஸுன்னத் பற்றிய பாடம், பக்கம் 197 ,ஹதீத் எண் 1385

மேலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ,


قال ‏ ‏أبو إسحق ‏ ‏هذا ‏ ‏حديث صحيح

இமாம் அபூ இஷ்ஹாக் அவர்கள் கூறினார்கள் : 'இந்த ஹதீத் ஸஹீஹானது' 

Sunnan Ibn Majah, Published by Dar us Salaam

  
Page 197, Hadith No#1385


இமாம் திர்மிதி, ஜாமிஉஸ் ஸஹீஹ்,தாவத் பற்றிய பாடம்,பக்கம் 813,ஹதீத் எண் 3578 .இந்த ஹதீத் 'ஹஸன் ஸஹீஹ் கரீப் 'என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Sunnan Jami’i al Tirimdh

Book : Ad Da'waat Page : 813 Hadith number : 3578


* இமாம் நஸயீ , அமல் உல் லைல் வல்யவ்லா,பக்கம் 417,ஹதீத் எண் 658-659 .

Amal-ul-yawm wal-laylah



Amal-ul-yawm wal-laylah Page : 417 Hadith number : 658-659

* இமாம் அஹ்மத் பின் ஹன்பல்,முஸ்னத் அஹ்மத் ,(4:138 #17246-17247) . 

* இமாம் ஹாக்கீம் , முஸ்தத்ரக் , (1:313,519) .இந்த ஹதீத் 'ஸஹீஹ்' என்று    குறிப்பிட்டுள்ளார்கள் .

* இமாம் புஹாரி, தாரிக் அல் கபீர், பாகம் 6,பக்கம் 209 

Tareekh Al  Kabeer



Volume : 6 page : 209 Biography number : 2192
Volume : 6 page : 210 Biography number : 2192

* அப்து பின் ஹுமைத், அல் முஸ்னத்,பாகம் 1,பக்கம் 308,ஹதீத் எண் 379  .





Musnad Abd Bin Humaid

Volume : 1 Page : 308 Hadith number : 379

* இப்னு குஸைமா, ஸஹீஹ் இப்னு குஸைமா,ஸலாத் அல் தர்கீப் வதர்ஹீப்,பாகம் 2,பக்கம் 225,ஹதீத் எண் 1219 .

Sahih Ibn e Khuzimah




Salat At Targheeb Wat Tarheeb (527) Volume : 2 Page : 225 Hadith number : 1219

* இமாம் ஹாகீம் , அல் முஸ்தத்ரக்,பாகம் 2,பக்கம் 449,ஹதீத் எண் 1181 .

Mustadrak



Book : Salat At Tatawa' Volume : 1 Page : 449 Hadith number : 1181

* இமாம் பைஹகீ ,தலாயிலுந் நுபுவ்வா ,பாகம் 6,பக்கம் 166-167 .

Dala’il un Nubuwwah

Volume : 6 Page : 166-167

Volume : 6 Page : 166-167

* காழி இயாழ்,அஷ் ஷிபா,பாகம் 1,பக்கம் 322 .

Ash Shifa bi Tarifi Huqoq il Mustafa


Chapter: Ibra Al Marda Wa Zil 'Ahaat Volume : 1 Page : 322


* இமாம் நவவீ ,அல் அத்கார் ,பக்கம்  83 .

* இமாம் முன்திரி ,தர்கீப் வ தர்ஹீப்,பாகம் 1,பக்கம் 241 .

Targheeb Wat Tarheeb


Chapter : Salat Al Hajah Volume : 1 Page : 241



* ஹாபிழ் இப்னு கதீர் , அல் பிதாயா வந்நிஹாயா,பாகம் 4,பக்கம் 558 .

* இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி,அல் ஜவ்ஹர் அல் முனஜ்ஜம் , பக்கம் 61 .

* இமாம்களான இப்னு மாஜா ,ஹாக்கீம், தஹபி ஆகியோர் இந்த ஹதீத் ஸஹீஹ் என்றும் இமாம் திர்மிர்தி இதனை ஹஸன்,ஸஹீஹ் ,கரீப் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . 

* இதே போல், இமாம் ஹாக்கீம் விவரித்த மற்றொரு ஹதீத் வேறு வார்த்தைகளில் உள்ளது.இந்த ஹதீதில் , 'உத்மான் பின் ஹுனைப்  அவர்கள் தாம் நாயகம் صلى الله عليه وآله وسلم அவர்களின் சபையில் அமர்ந்து இருந்ததாக கூறுகிறார்கள் . ஓர்  பார்வையற்றவர் நாயகம் صلى الله عليه وآله وسلم அவர்களை அழைத்து ,தன் குறைபாட்டைக் குறித்து புகார் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவர் மேலும் கூறியதாவது: ‘அல்லாஹ்வின் தூதரே, என்னை வழிநடத்த யாரும் இல்லை, நான் மிகுந்த சிரமத்தில் இருக்கிறேன்.’ அவரது புகாரைக் கேட்ட நபிகள் நாயகம்  صلى الله عليه وآله وسلم கூறினார்கள் : 

உளூ செய்வதற்கு ஓர் மண் பானையில் நீர் கொண்டு வந்து உளூ செய்யுங்கள் .அதன் பின் இரண்டு ரக்அத் நபில் தொழுங்கள். அதன் பின்னர் , " யா அல்லாஹ் ! , நான் உன்னிடம் மன்றாடுகிறேன், உனது இரக்கமுள்ள நபிகள் நாயகத்தின் வஸீலாவின் மூலம் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். யா முஹம்மது صلى الله عليه وآله وسلم , உங்கள் வஸீலாவின் மூலம் நான் உங்கள் இறைவனிடம் என் கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும்படி சமர்ப்பிக்கிறேன். யா அல்லாஹ் ! , அன்னாரது பரிந்துரையை எனக்கு ஆதரவாக ஏற்றுக் கொள், என் வேண்டுதலையும் எனக்கு ஆதரவாக ஏற்றுக்கொள். " உத்மான் பின் ஹூனைப் அவர்கள் கூறுகிறார்கள் . " அல்லாஹ்வின் மீது ஆணையாக நாயகம் صلى الله عليه وآله وسلم அவர்களின் சபையை விட்டும் நாங்கள் அகலவுமில்லை ,நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கவுமில்லை  அந்த பார்வையற்ற மனிதர்  (தமது பார்வையை திரும்பப் பெற்றவராக ) நுழைந்தார் ,அவர்  ஒருபோதும் கண் குருடாக இருந்ததில்லை என்று தோன்றியது.

மேற்குறிப்பிட்ட ஹதீது பின்வரும் நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ; 

* இமாம் நஸயீ ,அமல் உல்யவ்ம் வல் லைலா,பக்கம் 418,ஹதீத் எண் 660

* இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ,அல் முஸ்னத் (4:138 )

* ஹாபிழ் இப்னு கதீர் ,அல் பிதாயா வந்நிஹாயா  ( 4:559 )

* இமாம் ஸுயூத்தி ,கஸாயிஸ் அல் குப்ரா , (2:201)

* இமாம் கஸ்த்தலானி ,அல் மவாஹிபுல்லதுன்னியா, (4:594)

* இமாம் பைஹகீ, தலாயிலுந் நுபுவ்வா, (6:166)  

நவீன கால ஸலபி வஹாபிகளின் முன்னோடி காழி ஷவ்கானி , தவஸ்ஸுலை அங்கீகரித்து கூறினார் : 

قوله ويتوسل إلى الله سبحانه بأنبيائه والصالحين أقول ومن التوسل بالأنبياء ما أخرجه الترمذي وقال حسن صحيح غريب والنسائي وابن ماجة وابن خزيمة في صحيحه والحاكم وقال صحيح على شرط البخاري ومسلم من حديث عثمان بن حنيف رضي الله عنه أن أعمى أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ادع الله أن يكشف لي عن بصري قال أو أدعك فقال يا رسول الله أني قد شق علي ذهاب بصري قال فانطلق فتوضأ فصل ركعتين ثم قل اللهم أني أسألك وأتوجه إليك بمحمد نبي الرحمة الحديث وسيأتي هذا الحديث في هذا الكتاب عند ذكر صلاة الحاجة وأما التوسل بالصالحين فمنه ما ثبت في الصحيح أن الصحابة استسقوا بالعباس رضي الله عنه عم رسول الله صلى الله عليه وسلم وقال عمر رضي الله عنه اللهم إنا نتوسل إليك بعم نبينا

 

இமாம் இப்னு அல்ஜர்ஸி அவர்கள்  ' அல்லாஹ்விடம்  அன்பியாக்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரை இடைபொருளாக கொண்டு உதவி தேட வேண்டும்  '  என்று கூறியதை காழி ஷவ்கானி  பின்வருமாறு விளக்குகிறார் , 'நான் கூறுகின்றேன் அல்லாஹ்விடம்  அன்பியாக்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரை இடைபொருளாக கொண்டு உதவி தேடுவது (நிரூபிக்கப்பட்டுள்ளது) இமாம் திர்மிதி ஸஹீஹ் ஹசன் கரீப் என்று விவரித்தது கொண்டும் , இன்னும் நஸயீ ,இப்னு  மாஜா விவரித்தது கொண்டும் மற்றும் இப்னு குஸைமா தன்னுடைய ஸஹீஹ் ஹாகிம் கூறுகிறார் : ' புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோரின் அளவுகோல்படி ஸஹீஹ் , உத்மான் பின் ஹுனைப்  رضي الله عنه  அவர்களுடைய ஹதீத் ; ஒரு பார்வையற்றவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து , 'நான் என் பார்வை குறைபாடுள்ளவன் , எனவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் ' என்று கூறினார் . நபிகள் நாயகம் صلى الله عليه وآله وسلم கூறினார்கள் , ' நீர் ஒழு செய்து விட்டு , இரண்டு ரக்அத் தொழுத பின்னர் , 'யா அல்லாஹ் ! நான் எனது தூதர் முஹம்மது அவர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் , உன்னிடம்  முகம் திரும்புகிறேன் .' இந்த ஹதீஸ் பாபு ஸலாத் அல் ஹாஜத் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது .


இன்னும் இறைநேசர்களை தவஸ்ஸுலாக கொண்டு உதவி தேடுவது ,  ஸஹீஹ் புஹாரியில் ஸஹாபா பெருமக்கள் கண்மணி நாயகத்தின் صلى الله عليه وآله وسلم சிறிய தந்தை ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்  رضي الله عنه அவர்களைக் கொண்டு மழை பொழிய வேண்டி உதவி தேடிய ஹதீதின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர்  رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , ' யா அல்லாஹ் ! நாயகம் அவர்களது சிறிய தந்தை அப்பாஸ் அவர்களைக் கொண்டு உன் பக்கம் திரும்புகின்றோம் '. 


[ துஹ்பதுல் தாக்கிரீன் , பக்கம்  48 ] 


இன்னும் அவர் கூறினார் , 


அல்லாஹ்  வழங்குகிறான் ,எடுத்துக் கொள்கிறான் என்ற நம்பிக்கையில் கண்மணி நாயகம் அவர்களை வஸீலாவாக கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுவதன் ஆதாரம் இந்த ஹதீதில் உள்ளது  . அல்லாஹ் எதை நாடினானோ அதுதான் நடக்கும் , அவன் எதை நாடவில்லையோ அது நடக்காது . 


[ துஹ்பதுல் தாக்கிரீன் , பக்கம்  138 ] 


Tuhfah uth-Dhakireen, Dar al-Kitab al-Arabi, Beirut, Lebanon








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...