Sunday 25 February 2024

ஷபே பராஅத்


ஹழ்ரத் ஸெய்யிதினா முஆத்  பின் ஜபல் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " அல்லாஹ்  سبحانه و تعالى ஷஃபான் மாதத்தின் இரவில்  தன் அடியார்களை நெருங்கி வருகின்றான்.இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோரது பாவங்களையும் மன்னிக்கின்றான் "

ஆதாரங்கள் : 
 📚 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ,பாகம் 12,பக்கம் 479,ஹதீஸ் # 5665
  📚இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் கபீர்,பாகம் 20,பக்கம் 108,ஹதீஸ் # 215.
  📚 இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் அவ்ஸாத்,பாகம் 07,பக்கம் 36,ஹதீஸ் # 6776.
📚 இமாம் தப்ரானீ,அல் முஸ்னத் ஷாமியீன்,பாகம் 1,பக்கம் 128,ஹதீஸ் # 203.
 📚 இமாம் தாரகுத்னீ ,நுஸுல்,பாகம் 01,பக்கம் 58,ஹதீஸ் # 77
 📚  இமாம் பைஹகீ ,ஷுஅபுல் ஈமான்,பாகம் 9,பக்கம் 24,ஹதீஸ் # 6204
 📚 இமாம் பைஹகீ,பழாயில் அல் அவ்காத்,பாகம் 01,பக்கம் 22,ஹதீஸ் # 22
📚  இமாம் அபூநுஐம் இஷ்பஹானி ,ஹில்யதுல் அவ்லியா,பாகம் 5,பக்கம் 191
 📚  மறுப்பாளர்களது தலைவர் -இமாமுல் வஹாபியா,நஸீருத்தீன் அல்பானி ,ஸில்ஸிலா அல் ஹதீஸ் அல் ஸஹீஹ்,பாகம் 3,பக்கம் 135,ஹதீஸ் # 1144.

இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதை ஷஃபான் மாதத்தில் அல்லாஹ்  سبحانه و تعالى தனது அடியார்களை மன்னிப்பது தொடர்பான அறிவிப்பு என்ற பாடத்தில் வைத்துள்ளார்கள்.


ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி அஷ்ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " முஜம் அல் கபீர் மற்றும் முஜம் அல் அவ்ஸாதில் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் பதிவு செய்துள்ள இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடர் 'திகா' வாகும் " 
  📚 மஜ்முஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 126,ஹதீஸ் # 12860

இமாம் இப்னு ரஜப் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் இந்த ஹதீத் ஸஹீஹானது என்று எழுதுகின்றார்கள்.
 📚 லதாயிப் அல் மவாரிப்,பாகம் 01,பக்கம் 224

Wednesday 7 February 2024

மிஃராஜ் நோன்பு

*மிஃராஜ் நோன்பின் சிறப்பும்*
*மார்க்க அறிஞர் பெருமக்களின் கூற்றும்* 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

📌وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله   عَنْهُ  عَنِ النَّبِي ﷺِّ قَالَ  مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
 واحياء علوم الدين : ١/٣٢٨‎
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 
யார் ஒருவர் ரஜப் மாதம் 27-ம் நாள் நோன்பு நோற்கிறாரோ 
அவருக்கு 60 மாதம் நோன்பு நோற்ற கூலி எழுதப்படும் 
நூல்: ஃகுன்யத்துத் தாலிபீன்- கவ்துல் அஃலம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி قدس الله سره العزيز, இஹ்யாவுலூமுத்தீன் - ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه 

📌 ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح 
ابن قاسم  158)
திங்கள்கிழமை, வியாழக்கிழமை மற்றும் மிஃராஜ் தினம் ஆகிய நாள்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பர்மாவி அலா ஷறஹி இப்னு காஸிம்

📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: இஆனதுத் தாலிபீன் 

📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பாஜுரி

📌 ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله  - برماوي
حاشية الجمل ٢/٣٤٩
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்:ஹாஷியத்துல் ஜமல்

 📌وَيُسْتَحَبُّ صَوْمُ يَوم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨

📌 وَالبَاجُورِي: ١/٣٩٢ 

📌وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥) 
மிஃராஜ் தினம் 
நோன்பு நோற்பது
சுன்னத்தாகும் 
நூல்: ஃபத்ஹுல் அல்லாம், பாஜுரி, 
ஃபதாவஷ் ஷாலியாத்தி

மிஃராஜ் நோன்பு சுன்னத் என்பதற்கான 
ஃபிக்ஹு நூற்களின்  ஆதாரங்கள்.. 

1) ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح ابن قاسم  158)

2) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)

3) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)

4) ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله  - برماوي
حاشية الجمل ٢/٣٤٩

5) 
‎وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله   عَنْهُ  عَنِ النَّبِي ﷺِّ قَالَ  مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
6 ) واحياء علوم الدين : ١/٣٢٨‎

7) وَيُسْتَحَبُّ صَوْمُ يَوْم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨

8 ) وَالبَاجُورِي: ١/٣٩٢ 

9) وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥)
மிஃராஜ் நோன்பின் நிய்யத்
 *சுன்னத்தான மிஃராஜ் நோன்பை நோற்கிறேன்*

களாவான நோன்பு இருந்தால்... 

 *களாவான ரமளான் நோன்பையும், சுன்னத்தான மிஃராஜ் நோன்பையும் நோற்கிறேன் என்று நிய்யத் செய்யவும் ..

 *மிஃராஜ் பயணம்*

•┈•✿❁ ﷽ ❁✿•┈• 

கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்த பதினொன்றாம் வருடம் ரஜப் மாதம் பிறை 27 ஆம் நாளன்று திங்கட்கிழமை நாயகம் ﷺ அவர்களது பாட்டனார் அபூதாலிப் அவர்களுடைய மகளார் உம்மு ஹானிஃ  என்பவருடைய வீட்டில் துயில் கொள்ளும் போது வானவர் கோமான் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தலைமையில் ஒருசில மலக்குமார்கள் வருகை புரிந்தார்கள்.பின்னர்  நாயகம் ﷺ அவர்களை ஜம்ஜம் கிணற்றுக்கு அருகாமையில் கொண்டு சென்று பூமான் நபி ﷺ அவர்களுடைய திரு இதயத்தை எடுத்து ஜம் ஜம் நீரால் கழுவி அதில் இறை ஞானத்தை நிரப்பினார்கள்.

பின்னர் மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து பைத்துல் முகத்தஸை நோக்கியுள்ள பயணம்.இடையில்  பேரீத்தம் பழ மரங்கள் நிறைந்த ஓர் இடத்தை அடைந்தார்கள்.ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் அந்த இடத்தில் இறங்கி தொழுமாறு கேட்டுக் கொண்டார்கள். நாயகம் ﷺ அவர்கள் இறங்கி தொழுகை நடத்தி திரும்பி வந்தார்கள்.பின்னர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் நாயகமே! தாங்கள் தொழுத அந்த இடம் எதுவென்று அறிவீர்களா..?

நாயகம் ﷺ அவர்கள் : இல்லை...

ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) : அதுதான் தாங்கள் ஹிஜ்ரா பயணம் வருவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்த தைபா (மதீனா) என பதிலளித்தார்கள்.

{ நூல் : அல் அன்வார் }

Sunday 4 February 2024

அப்தழியத்

*அய்மா ஏ அர்பாக்களது அகீதா*

இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்கப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்கள்  முதலாவது  ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه ,பின்னர் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه ,அதன் பின்னர் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه , அதன் பின்னர் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் رضي الله عنه ".

📚 *பிக்ஹுல் அக்பர்*

இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் கிலாபத் குறித்தும் அப்தழியத் குறித்தும் நவின்றார்கள் ,

" நமது வரிசைப்பிரகாரமாகிறது  அபூபக்கர் رضي الله عنه ,உமர் رضي الله عنه , உஸ்மான் رضي الله عنه ,அலீ رضي الله عنه " .

📚 *அல் இக்திகாத்,இமாம் பைஹகீ* رضي الله عنه

இமாம் மாலிக் رضي الله عنه அவர்களிடம் ஷெய்கன்களது அப்தழியத் குறித்து வினவப்பட்ட பொழுது  அன்னார்  , " ஸெய்யிதினா அபூபக்கர், மற்றும் ஸெய்யிதினா உமர் ஆகியோரது அப்தழியத் குறித்து சிறிதும் சந்தேகம் இல்லை " என்று நவின்றார்கள்.

📚 *ஷரஹ் உஸுல் இக்திகாத் அஹ்லுஸ் ஸுன்னா*

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களிடம் ஸஹாபா பெருமக்களை நேசிப்பதாக  கூறி அவர்களிடையே தரஜாக்களில் பாகுபாடு மாட்டேன் என்று கூறும் நபர் பற்றி கேட்கப்பட்டது . அன்னார் , " குலபாயே ராஷிதீன்களது வரிசைப்பிரகாரம் அபூபக்கர் رضي الله عنه , உமர் رضي الله عنه ,உஸ்மான் رضي الله عنه மற்றும் அலீ رضي الله عنه ஆகியோருக்கு முன்னுரிமை அளிப்பது ஸுன்னத் " என்று நவின்றார்கள்.

📚 *அல் ஸுன்னாஹ் இப்னு ஹிலால்*

இதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தின் கொள்கை.இதற்கு மாற்றமாக கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் தலைசிறந்தவர்கள் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه என்பவர்கள் வழிகெட்ட கொள்கையினர் ஆவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...