Friday 22 March 2024

தராவீஹ் பலவீனமான ஆதாரங்கள் !

🌹எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகைக்கான ளயீபான ஆதாரம் 🌹

இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது ஹதீதுக் கிரந்தமான "முவத்தா"  வில் வருகின்ற எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றி விபரம் 

இமாம் காழீ அப்துல் பர் அந்தலூசி மாலிக்கி  رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு - ஹிஜ்ரி 463 ) கூறுகின்றார்கள் , 

முஹம்மது பின் யூசுப் அவர்கள் மூலமாக வருகின்ற இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது தராவீஹ் பதினொன்று ( எட்டு + மூன்று)  ரக்அத் என்ற அறிவிப்பு ளயீபானது.

அதே நூலில் முற்பகுதியில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபாக்களது இருபது ரக்அத் தராவீஹ் தொழுகையை மேற்கோள் காட்டி எழுதுகின்றார்கள், இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது 'முஅத்தா' கிரந்தத்தில் வரும் பதினொரு ரக்அத் ( எட்டு + மூன்று) ளயீபானது என்பதை குறிக்கின்றது.

ஸஹீஹான ரிவாயத் என்பது இருபது ரக்அத்துகள் வரும் அறிவிப்பேயாகும். 

📚 அல் இஸ்தித்கார் லீ மத்ஹப் உலமா ,இமாம் அப்துல் பர் رَحِمَهُ ٱللَّٰهُ ,பாகம் 5,பக்கம் 156

Sunday 17 March 2024

ஸஹாபாக்களது தராவீஹ்

🌹சத்திய சீலர்கள் ஸஹாபாக்களது இஜ்மா தராவீஹ் 🌹

இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " ஹழ்ரத் ஸயீப் பின் யஸீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாபத்தின் போது ,ரழமானில் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை தொழுவோம்.இன்னும் கூறினார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில்  மீன் வரை ஓதிவிட்டு ,வெகுநேரம் நின்று ஓதுவதால் உண்டாகும் சிரமம் காரணமாக தமது கைத்தடிகளில் சாய்ந்து கொள்வர் " .

📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ ,ஸுனன் குப்ரா,ஹதீஸ் # 4617,ஷெய்குல் இஸ்லாம் இமாம் நவவி رضي الله عنهஇதன் ஸனது  ஸஹீஹ் என்கிறார்கள்.  அல் குலாஸா அல் அஹ்காம்,ஹதீஸ் # 1961

🌹ஸஹாபாக்கள் மற்றும் ஸலபுஸ் ஸாலிஹீன்களது  இஜ்மா தராவீஹ் 🌹

இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நவின்றார்கள் , " மார்க்கம் கற்று அறிந்த பெரும்பான்மையோர் ,இருபது ரக்அத்துகள் தராவீஹ் என்பதை ஸெய்யிதினா உமர் رضي الله عنه ,ஸெய்யிதினா அலீ رضي الله عنه மற்றும் ஏனைய ஸஹாபா பெருமக்களது அறிவிப்புகளில் இருந்தும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஸலபுகளான ஸெய்யிதினா ஸுப்யானுத் தவ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ ,இமாம் ஷாபிஈ رضي الله عنه, இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் رضي الله عنه ஆகியோரும் அங்கனமே கூறினர். இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் மக்காவாசிகள் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுததை தாம் பார்த்ததாக கூறியுள்ளார்கள் " 

📚 இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ ,ஜாமிஉத் திர்மிதி,நோன்பின் பாடம்,ரமழானில் கியாம் குறித்த பாகம்,ஹதீஸ் # 806,ஸஹீஹ் ஹதீஸ் .

🌹தராவீஹ் தொழுகையை ஜமாத்துடன் தொழுத ஸஹாபா பெருமக்கள்  🌹

ஹதீஸ் 1 : 
 அப்துல் அஜீஸ் பின் ரபி கூறினார் , " ஸெய்யிதினா உபை இப்னு கஃப் رضي الله عنه  அவர்கள் மதீனாவில் ரமழானில் இருபது ரக்அத் மற்றும் மூன்று ரக்அத் வித்ரு தொழுகைக்காக மக்களுக்கு இமாமத் செய்தனர்

ஹதீஸ் 2 : 
  அபுல் ஹசனா அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه இருபது ரக்அத் தொழுகைக்கு இமாமத் செய ய்திட உத்தரவிட்டார்கள்.

ஹதீஸ் 3 : 
  ஸெய்யிதினா நாபி பின் உமர் رضي الله عنه அவர்களிடமிருந்து வகீ அறிவிக்கின்றார்கள் , " ஸெய்யிதினா இப்னு அபீ முலைகா رضي الله عنه அவர்கள் ரமழானில் இருபது ரக்அத் தொழுகையில் எங களுக்கு இமாமத் செய்தார்கள் " 

📚 முஸன்னப் இப்னு அபீ ஷைபா ,ஹதீஸ் # 7766,7763,7765


🌹 ஸஹாபாக்களது தராவீஹ் ஜமாஅத் 🌹

ஹழ்ரத் ஸயீத் பின் யசீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபா பெருமக்கள் இருபது ரக்அத் தராவீஹ் தொழுதனர்.இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆயத்துகளை ஓதினர்.அதன் தொடர்ச்சியாக அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் மக்கள் தொழுகையில் தடிகளால் தாங்கிக் கொண்டிருந்தனர்.

📚 இமாம் பைஹகீ رضي الله عنه  ,ஸுனன் குப்ரா




Friday 8 March 2024

உம்மத்தின் அமல்களை காணும் ஏந்தல் நபி  ‎ﷺ ‏

🌹திருநபி  ﷺ அவர்களது சங்கைமிகும் சமூகத்தில் உம்மத்தின் அமல்கள் 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ஆசிரியப் பெருந்தகை இமாம் நூருத்தீன் ஹைத்தமீ ஷாபிஈ அஷ்அரீ மிஸ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ( மறைவு - ஹிஜ்ரி 807)  , தமது ஹதீது கிரந்தந்தில் பதிவு செய்துள்ளார்கள்,

ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அண்ணல் எம்பெருமானார்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " என்னுடைய பிறப்பும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கின்றது, துன்யாவை விட்டும் என்னுடைய மறைவும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கும்.உங்களுடைய அமல்கள் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றது. அவை நல்லமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى வை புகழ்ந்து ,நன்றி செலுத்துகின்றேன்.தீய அமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى விடத்தில் அதனை மன்னித்துவிடக் கோரி துஆ செய்கின்றேன். " 

📚 மஜ்மஉஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 427,ஹதீஸ் # 14250 

மிஸ்ரில் பிறந்த இமாம் நூருத்தீன் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,ஷெய்குல் இஸ்லாம் இமாம் தகீயுத்தீன் சுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மாணவர் இமாம் ஹாபிழ் ஜைனுத்தீன் இராக்கி ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஹதீதுக் கலையைக் கற்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...