Monday 28 November 2022

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களிடத்தில் தவஸ்ஸுல் ‎: ‏


இமாம் இப்னு ஜவ்ஸி அல் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " இமாம் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது நண்பர் ,இமாம் அபூபக்கர் இப்னு முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒருமுறை ஏந்தல் நபி  ﷺ அவர்களது புனித ரவ்ழா ஷரீபிற்கு ஜியாரத்திற்கு சென்று ,அங்கேயே சில நாட்கள் கழித்தனர். அவர்களிடத்தில் உணவு இல்லை ,எனவே அவ்விருவரில் ஒருவர் ,' பெருமானார்  ﷺ அவர்களது ரவ்ழா ஷரீபிற்கு சென்று ," யா ரஸூல்லல்லாஹ் ! பசி ,பசி " என்றனர்.சிறிது நேரம் கழித்து அலவிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெருமகனார் ( அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபிதாலிப் رضي الله عنه அவர்களது பிச்சளத்தைச் சார்ந்தவர்)  ,பெருமானார்  ﷺ அவர்களிடம் கனவில் தோன்றி கூறியதற்கு இணங்க ,அவர்களிடம் உணவுடன் வருகை புரிந்தார்கள்.

ஹாபிழ் அபூபக்கர் இப்னு முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள் , " நான் ஹாபிழ் தப்ரானி அவர்களுடனும் ,ஹாபிழ் அபூ ஷெய்கு அவர்களுடனும் எம்மான் நபி  ﷺ அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ,சிறிது கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன்.பசி எங்களை வாட்டியது. அன்றைய தினமும் ,அதற்கடுத்த தினமும் உணவில்லாமல் சிரமத்திற்கு உள்ளானோம்.இஷாவுடைய நேரம் வந்ததும் நான் தாஹா ரஸூல்  ﷺ அவர்களது ரவ்ழா ஷரீபை நெருங்கி , " யா ரஸூல்லல்லாஹ் ! நாங்கள் பசியில் இருக்கின்றோம் ! நாங்கள் பசியில் இருக்கின்றோம் ! " என்று கூறிவிட்டு ,அங்கிருந்து சென்றுவிட்டேன்.

ஹாபிழ் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் என்னிடம் , " அமருங்கள். ஒன்று நமக்கு உணவு காத்திருக்கும் அல்லது மரணம் காத்திருக்கும் " என்று கூறினார்கள்.அலவிப்  பெருமகனார் ஒருவர் ( அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபிதாலிப் رضي الله عنه அவர்களது பிச்சளத்தைச் சார்ந்தவர்)  இரண்டு சிறுவர்களுடன் வந்து கதவை தட்டினார்.அவ்விரு சிறுவர்களும் தமது கைகளில் ஈச்ச மர கூடை நிறைய உணவுடன் வந்திருந்தனர்.நாங்கள் எழுந்து ,உணவருந்தினோம்.அச்சிறுவர்கள் மீதமிருந்த உணவுகூடையைத் தம்முடன் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் என்று எண்ணினோம்,ஆனால் அவர்களை அதனை அங்கேயே விட்டுவிட்டனர்.நாங்கள் உணவருந்தி முடித்தபின்னர் அலவிப் குடும்பத்தைச் சார்ந்த அப்பெருமகனார் , " மக்களே ! தாங்கள் ஏந்தல் நபி  ﷺ அவர்களிடம் ஏதேனும் கோரிக்கை வைத்திருந்தீர்களா ? நான் உறக்கத்தில் இருந்தேன்.எல்லாம் நபி  ﷺ எனது கனவில் தோன்றி ,நீங்கள் உண்பதற்கு ஏதேனும் கொண்டு செல்லுமாறு பணித்தார்கள் " என்றார்.

இவ்வரலாற்று நிகழ்வை இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது  " தத்கிரதுல் ஹுப்பாழ் - ( ஹதீதுக்கலை அறிஞர்களது வரலாறு) " நூலில் இமாம் அபூபக்கர் முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ஆகியோரது தர்ஜுமாவில் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ , 📚 ஸியார் அஃலா மின் நுபுலா -(16/400-401) |📚 தத்கிரதுல் ஹுப்பாழ் - ( 3:973-974) .

இமாம் இப்னு ஜவ்ஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ ,📚 கிதாப் அல் வபா ,பக்கம் 818, எண்:1536.

மேலும் ஆதாரங்கள் : 

1) الوفا بتعريف فضائل المصطفى للإمام الحافظ جمال الدين أبي الفرج عبد الرحمن بن علي الجوزي الحنبلي(المتوفى :597هـ) ج1, ص 818, طبع دار المعرفة بيروت ـ لبنان .

2) تاريخ الإسلام للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج27, ص39, طبع دار الكتاب العربي، بيروت .

3) تذكرة الحفاظ الإسلام للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج3, ص121, طبع دار الكتب العلمية بيروت-لبنان .

4) سير أعلام النبلاء للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج12, ص 382, دار الحديث- القاهرة ـ مصر .

5) وفاء الوفاء بأخبار دار المصطفى للإمام المؤرخ نور الدين علي بن عبد الله السمهودي (المتوفى: 911هـ) ج4, ص200, طبع دار الكتب العلمية – بيروت .

6) المحاضرات والمحاورات للإمام الحافظ جلال الدين السيوطي (المتوفى : 911هـ) ج1, ص 427, طبع دار الغرب الإسلامي، بيروت .

7) صفحات من صبر العلماء للشيخ عبد الفتاح أبي الغدة (المتوفى: 1417هـ) ص73, طبع مكتب المطبوعات الإسلامية – حلب .

இவ்வரலாற்று நிகழ்வு மாபெரும் ஹதீத் கலை வல்லுநர்களான இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ,  இமாம் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ ஆகியோரது கொள்கையையும்,இந்நிகழ்வை அறிவிக்கும் இமாம் இப்னு ஜவ்ஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கொள்கையையும் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது.மேலும் இந்நிகழ்வை எவ்வித விமர்சனமுமின்றி அறிவிப்பதன் மூலம் இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கொள்கையையும் காட்டுகின்றது. ஜர்ஹ் வ தஃதீல் கலையில் மிகவும் கண்டிப்பானவர்களான இமாம் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது நூலின் ஆரம்பத்தில் தாம் ஸஹீஹான அறிவிப்பகளுடன் பலகீனமான அறிவிப்புகளை கலக்கவில்லை என்று கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் மற்றொரு முஹத்தித் அறிஞரான இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது சுய அனுபவத்தை பதிவு செய்து எழுது கின்றார்கள் , " துஸ் நகரில் நான் இருக்கும் காலம்,எப்போதெல்லாம் என்னை சோதனை சூழ்கின்றதோ,நான் ஸெய்யிதினா இமாம் அலீ இப்னு மூஸா رضي الله عنه அவர்களது ஸியாரத்திற்குச் சென்று ,அல்லாஹ்விடம் என்னை அந்த சோதனையை விட்டும் காப்பாற்றிட துஆ செய்தவேன்.எனது துஆ ஒப்புக்கொள்ளப்பட்டு ,துன்பங்கள் என்னை விட்டும் விலகிடும்.இதனை நான் பலமுறை எனது அனுபவத்தில் செய்து,பலன் பெற்றுள்ளேன்" .

இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ,📚 கிதாப் அல் திகாத்,பாகம் 8,பக்கம் 456-457 .

அன்பியாக்கள் தமது மறைவிற்குப் பின்னர் ஹயாத்துடன் பர்ஜக்குடைய வாழ்வை வாழ்கின்றனர் என்பதும் ஸெய்யிதுல் அன்பியா கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் தம் சமூகத்தில் வைக்கப்படும் கோரிக்கைகளை கேட்டு ,உதவி தேடுபவர்களுக்கு உதவி அளிக்கின்றனர் என்பதும் இவ்வரலாற்று நிகழ்வின் படிப்பினைகளாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...