Friday 15 July 2022

ஜியாரத்தை நோக்கி பயணம்

அண்ணல் நபி  ﷺ அவர்களது ஜியாரத் : 

மதீனத்து வேந்தர்,ஈருலக இரட்சகர்,ஷபீயுல் முத்னிபீன் முஹம்மது முஸ்தபா  ﷺ அவர்கள் இப்பூவுலகை விட்டும் மறைந்த பின்னர், 'ஆஷிகீன்கின் நாயகம்' நாயகத் தோழர் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் தன் ஹபீப் முஸ்தபா  ﷺ ஆற்றொன்னா பிரிவால் ஏங்கி  மதீனாவின் ஒவ்வொரு பகுதியும் அண்ணல் நபி  ﷺ அவர்களை நினைவூட்டுவதால், மதீனத்துல் முனவ்வராவை விட்டு ,ஷாம் தேசம் சென்று விடுகின்றார்கள்.

ஒருபொழுது ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் ஷாம் தேசத்தில் இருக்கும் வேலையில்,அருமை நபி நாயகம்  ﷺ அவர்கள் தமது தோழரின் கனவில் தோன்றினார்கள். பின்னர் நாயகம்  ﷺ அவர்கள் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்களிடம் , " பிலால் , இது எவ்வாறான அநீதம் ? எவ்வாறான சங்கடம் ? என்னை விட்டும் விலகிச் சென்று விட்டீரே ? " 

என்னை வந்து சந்திப்பதற்கான நேரம் வரவில்லையா ? " என்று வினவினார்கள்.

தமது நாயகத்தின் கேள்விதனைக் கேட்ட ஸெய்யிதினா பிலால் رضي الله عنه துக்கம் மேலிட விழித்தெழுந்தார்கள். மதீனத்து வேந்தர்  ﷺ அவர்களது மாட்சிமைமிகு தர்பார் நோக்கி விரைந்து பயணப்படலானார்கள்.

மதீனா முனவ்வரா வந்தடைந்து ,மன்னர் மஹ்மூதர்  ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழாவிற்குச் சென்று ஆரத்தழுவி ,தேம்பி தேம்பி அழுதார்கள்.இன்னும் தமது முகத்தை புனிதமிகும் ரவ்ழா ஷரீபில் தேய்த்து அழுதார்கள். 


  • இமாம் தகீயுத்தீன் ஸுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ, ஷிபாஉஸ் ஸிகாம் பீ ஸியாரத்தி ஹைரில் அனாம் ,பக்கம் 185

இந்த ஹதீதை அநேக முஹத்திஸீன்கள் தமது நால்களில் எழுதியுள்ளனர்.இதனை ' ஹஸன்' என்றும் கூறியுள்ளனர்.


  • இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக் திமிஷ்க்,பாகம் 7,பக்கம் 137.இமாம் இப்னு அஸாகிர் இந்த ரிவாயத்தின் ஸனதும் நன்று என்று கூறியுள்ளார்கள்.

  • இமாம் இப்னு அதீர் رَحِمَهُ ٱللَّٰهُ, உஸுதுல் காபா,பாகம் 1,பக்கம் 308.

  • இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ,தஹ்தீப் அல் அஸ்மா ,பாகம் 1,பக்கம் 136.

  • இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக்குல் இஸ்லாம்,பாகம் 17,பக்கம் 66.

  • இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,ஸியார் அஃலம் அந்நுபலா,பாகம் 1,பக்கம் 358.

  • ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ,மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 2,பக்கம் 583.

  • காழீ ஷவ்கானி,நைல் அல் அவ்தார்,பாகம் 4,பக்கம் 180.இதில் காழீ ஷவ்கானி இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ரிவாயத்தை ஸஹீஹான ஸனதுடன் நகல் எடுத்துள்ளார்கள் என்று கூறுகின்றார்.


Related Posts Plugin for WordPress, Blogger...