Thursday 8 December 2022

தவஸ்ஸுல்

ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் رضی الله عنها அவர்கள் வஃபாத்தான பொழுது ,எம்பெருமானார் ஷபீயுல் முத்னிபீன்  ﷺ அவர்கள் பின்வரும் துஆவை அவர்களை புதைப்பதற்கு முன்னர் ஓதினார்கள் , 

" அல்லாஹ்வே உயிரளிப்பவன் ,அவனே உயிரை எடுக்கவும் செய்கின்றான்.அவன் என்றென்றும் நிலைத்திருப்பவன்.அவனுக்கு மரணமில்லை.எனது தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக நாயனே .அவரது இருப்பிடத்தை விசாலப்படுத்துவாயாக ( மண்ணறையை) ,அவரது நபியின் பொருட்டாலும் ( பி ஹக்கி நபியிக்க) ,எனக்கு முன்னர் வந்த நபிமார்களது பொருட்டினாலும் ( வல் அன்பியா அல்லதீன மின் கப்லீ) .ஏனெனில் நீயே இரக்கமுள்ளவன் ." 


  • இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஜம் அல்கபீர் (24:351) ,முஜம் அல் அவ்ஸத்,பாகம் 1,பக்கம் 67-68,ஹதீத் எண் - 189.

  • இமாம் அபூநுஐம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ, ஹில்யதுல் அவ்லியா,3:121.

  • இந்த அறிவிப்பு ஸஹீஹ் என்று இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் இமாம் ஹாக்கிம் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் கூறுகின்றனர் ,ரவூப் அல்மனாரா,பக்கம் 147,மகாலத் அல்கவ்தாரி.

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிப்பாளர் தொடர் நன்று ( ஜய்யித் ஸனத்) என்கிறார்கள்.( இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது அல்மனாஸிக் நூலின் ஒரக்குறிப்பில் பக்கம் 500) .

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ, மஜ்ம அஸ்ஸவாயித்,(9:256-257)

  • ஹாபிழ் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ,அல் முன்தனஹிய்யாஹ் ,1:268-9,எண் : 443.


உஸ்மானிய கிலாபத்தின் இறுதி ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜாகித் அல் கவ்தாரி ஹனபி  رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதைக் குறித்து எழுதுகின்றார்கள் , " உயிரோடிருப்பவர்கள் மற்று இறந்தவர்களை வஸீலாவாக்குவதற்கு எழுத்துபூர்வமான ஆதாரமாக இது இருக்கின்றது.இது நபிமார்களின் மூலம் வெளிப்படையாக தவஸ்ஸுல் கோருவதாகும்.ஸெய்யிதினா அபூ ஸயீத் அல் குத்ரி رضي الله عنه அவர்கள் அறிவிக்கும் ஹதீஸான " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் கேட்பவர்களின் உரிமையைக் கொண்டு நான் கேட்கின்றேன் " என்பது பொதுவான முஸ்லிமான எல்லோரிடத்திலும் ,உயிருடனிருப்பவர்,மறித்தவர் ஆகியோரைக் கொண்டு தவஸ்ஸுல் ஆகுமானது என்பதன் ஆதாரமாகும்.

📚  மகாலாத் ,பக்கம் 410.


 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...